தேர்தலுடன் தொடர்புடைய 642 வன்முறை சம்பவங்கள் பதிவு!!!

Published By: Digital Desk 7

27 Jan, 2018 | 06:10 PM
image

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் இடம் பெற்ற வண்ணமே உள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

பெப்ரல் அமைப்பு வெயிளிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகையான  தேர்தல் வன்முறை சம்பவங்களும் அது தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

அறிக்கையில் மேலும்,

தேர்தல் தொடர்பான 557 முறைப்பாடுகளும்,  தேர்தலுடன் தொடர்புடைய 642 வன்முறை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இவற்றில் 84 வன்முறையுடன் தொடர்புடைய சம்பவங்களும், 98 தேர்தல் சட்ட மீறலுடன் தொடர்புடைய சம்பவங்களும் பதிவாகியுள்ளன.மேலும் பதிவாகியவற்றில் 15 சம்பவங்கள் வைத்திய சாலையுடன் தொடர்புடையவையாகும். 

கடத்தல்  சம்பவம் தொடர்பாக 1 முறைப்பாடும்,அச்சுறுத்தலுடன் தொடர்புடைய ஒரு முறைப்பாடும், கட்டடங்கள் மற்றும் வீடுகளுக்கு சேதம் விழைவித்தமை தொடர்பாக 7 முறைப்பாடுகளும் , வாகனங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பாக 6 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. 

சட்ட விரோத கட்சி காரியாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக 22 முறைப்பாடுகளும், சட்ட விரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்றதாக 172 முறைப்பாடுகளும் , கட்டாயப்படுத்தி வாக்களிக்க அச்சுறுத்தியமை தொடர்பில் 13 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்  துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையதும், வெடிபொருள் பயன்படுத்தலுடன் தொடர்புடையதான சம்பவங்களோ, முறைப்பாடுகளோ பதிவாகவில்லை. என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04