மாளிகைப்பிட்டி கிராம மக்களை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வெளியேறிச்செல்ல பலவந்தம் : மக்கள் விசனம்

Published By: Digital Desk 7

27 Jan, 2018 | 11:57 AM
image

மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மாளிகைப்பிட்டி கிராமத்தில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்ற சில குடும்பங்களை அங்கிருந்து வெளியேறிச்செல்லுமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மாளிகைப்பிட்டி கிராமத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக  மேலாக சுமார் 69 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். 

எனினும் குறித்த கிராமத்தில் 2000 ஆண்டிற்கு மேற்பட்ட தொல்பொருள் பெறுமதியான கட்டிடம் ஒன்று குறித்த பகுதியில் காணப்படுவதாக தொல்பொருள் திணைக்களம் தமக்கு அறிவித்துள்ளதாக  மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் குறித்த பழமை வாய்ந்த இடிபாடுகளுடன் காணப்படுகின்ற கட்டிடத்தில் இருந்து சுமார் 500 மீற்றருக்குள் வசித்து வரும் மக்களை அங்கிருந்து வெளியேறிச்செல்லுமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தம்மை பலவந்தப்படுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து சென்று பின் மீண்டும் தமது கிராமத்தில் வந்து மீள் குடியேறியுள்ளதாகவும் யுத்தத்தின் போது தமது வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தற்போது தாம் புதிய வீடுகளை அமைத்து வாழ்ந்து வருகின்ற நிலையில் தம்மை அங்கிருந்து வெளியேறிச் செல்லுமாறு தொல் பொருள் திணைக்கள அதிகாரிகள் தம்மை நாளாந்தம் பலவந்தப்படுத்தி வருவதாகவும்  மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் இது வரை எவ்வித பலனும்  கிடைக்கவில்லை எனவும் தற்போது தமது வீட்டு வளாகத்தினுள் பயண் தரும் மரங்களை நாட்டவும் அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

தமக்கு வழங்கப்பட்டுள்ள காணிக்கான அனுமதிப்பத்திரம் உள்ள போதும் தொல் பொருள் திணைக்கள அதிகாரிகள் தம்மை அங்கிருந்து வெளியேற்ற முயற்சிப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே உரிய அதிகாரிகளும், அரசியல் வதிகளும் குறித்த விடையத்தில் தலையிட்டு உரிய தீர்வை பெற்றத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலி - மாத்தறை பிரதான வீதியில்...

2025-02-11 14:27:46
news-image

கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டார்...

2025-02-11 14:50:46
news-image

மின்வெட்டு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2025-02-11 14:22:52
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களினால்...

2025-02-11 14:11:27
news-image

ஜப்பானின் நிதி உதவியில் அநுராதபுரத்தில் இரண்டாம்...

2025-02-11 13:48:14
news-image

காலி சிறைச்சாலைக்குள் வீசப்படும் தடைசெய்யப்பட்ட பொருட்கள்...

2025-02-11 14:22:29
news-image

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றுமாறு...

2025-02-11 14:18:19
news-image

ரயில் - வேன் மோதி விபத்து...

2025-02-11 13:01:35
news-image

பிரதமரை சந்தித்தார் சர்வதேச நாணய நிதியத்தின்...

2025-02-11 14:21:18
news-image

வவுனியாவில் கடைத்தொகுதியிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

2025-02-11 12:57:30
news-image

ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில்...

2025-02-11 14:17:27
news-image

துபாயில் இன்று நடைபெறும் 2025 உலக...

2025-02-11 12:52:05