பதுளை அதிபர் விவகாரம் ; நியாயம் பெற்றுக்கொடுக்க முடியாத விசாரணைகள்

Published By: Priyatharshan

27 Jan, 2018 | 11:07 AM
image

பதுளை தமிழ் மகளிர் மகா வித்­தி­யா­லய அதி­பரை, மாகாண முத­ல­மைச்சர் மண்­டி­யிட வைத்­தமை, மன்­னிப்பு கோரச் செய்­தமை, அச்­சம்­பவம் தொடர்பில் பொய்­யான வாக்கு மூலத்தை வழங்க அச்­சு­றுத்­தி­யமை உள்­ளிட்ட விட­யங்கள் தேசிய மட்­டத்தில் அவ­தா­னத்தை பெற்­றுள்­ளன. இவ்­வா­றான ஒரு சூழலில் அந்த விடயங்கள் குறித்து பொலிஸ் விசா­ர­ணை­களும், ஊவா ஆளு­நரின் செய­லா­ளரின் கீழும் பிரத்­தி­யே­க­மான இரு விசா­ர­ணைகள் இடம்­பெறும் நிலையில் பாரா­ளு­மன்­றத்­திலும் 9 பேர் கொண்ட குழு­வொன்றின் முன்­னி­லையில்  விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன. இந்த விசா­ர­ணை­களின் போக்கு, அவ்­வி­சா­ர­ணைகள் ஊடாக பாதிக்­கப்­பட்ட அதி­ப­ருக்கு நியாயம் கிடைக்கக்கூடிய சாத்­தியக் கூறுகள் உள்­ளதா என தற்­போது கேள்வி எழுப்ப வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

 நேற்று முன்தினம் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்குழு­விலும் இந்த விவ­காரம் குறித்த இரு முறைப்­பா­டுகள் மீது இடம்­பெற்ற விசா­ர­ணை­களின் போது எழுப்­பப்பட்ட சில கேள்­வி­களின் பாலும் அதற்கு பிர­தி­வா­தி­க­ளாக ஆஜ­ரா­கி­யி­ருந்­த­வர்கள் வழங்­கிய பதில், வாய­டைத்துப் போன நிலை­மைகள்  மீது அவ­தானம் செலுத்தும் போதே, ஏற்­க­னவே கூறிய பொலிஸ் விசா­ர­ணைகள் உள்­ளிட்­டவை நியா­ய­மாக நடக்­கி­றதா அல்­லது அதன் ஊடாக நியா­யத்தைப் பெற்­றுக்­கொள்ள முடி­யுமா என்ற சந்­தேகம் எழு­கின்­றது.

 நேற்று முன்தினம் இடம்­பெற்ற மனித உரி­மைகள் ஆணைக்குழு விசா­ர­ணை­யா­னது, எச்.ஆர்.சி./236/18  எனும் முறைப்­பாட்டு இலக்­கத்­துக்கு அமை­வாக ஆரம்­பிக்­கப்­பட்­டது. அதன் முறைப்­பாட்­டா­ளர்கள் ஆசி­ரியர் சங்கச் செய­லாளர் ஜோஸப் ஸ்டாலின், கபே அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கீர்த்தி தென்­னகோன்.

ஊவா முத­ல­மைச்­சரும் மேலே பெய­ரி­டப்­பட்ட ஊவா கல்விச் செயலர் உள்­ளிட்­டோரும் செய்த செயல் கார­ண­மாக அர­சி­ய­ல­மைப்பின் 12(1) ஆவது அத்­தி­யாயம் மற்றும் 13 ஆம் அத்­தி­யாயம் ஊடாக உறுதி செய்­யப்பட்­டுள்ள மொழி மற்றும் கருத்து வெளிப்­பாட்டு உரிமை, 10 ஆவது அத்­தி­யாயம் ஊடாக உறுதி செய்­யப்­படும்  மன அமைதி ஆகி­யன கடு­மை­யாக மீறப்­பட்­டுள்­ள­தாக அந்த முறைப்­பாட்­ட­ாளர்கள் ஊடாக, சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது.

இதனை கருத்தில் கொண்டு விசா­ர­ணை­களை மனித உரி­மைகள் ஆணைக்குழு நேற்று முன்தினம் ஆரம்­பித்தபோது, அந்த விசா­ர­ணைகள் சுமார் 10 மணி நேரம் வரை நீடித்­தன.

இதன்­போதே பொலிஸ் விசா­ர­ணை­களின் போது முத­ல­மைச்­ச­ருக்கு பிணை வழங்க பொலிஸார் எதிர்ப்பு தெரி­விக்­காமை, பீ அறிக்­கையினைப் பெறத்­தக்­க­தாக தயார் செய்­தி­ருந்­தமை, சாட்­சிக்­காக முன்­வைக்க முடி­யு­மான முத­ல­மைச்­சரின் இல்­லத்தில் இருக்கும் சி.சி.ரி.வி. காணொ­ளிகள் முன்­வைக்­க­ப்ப­டாமை அல்­லது அவை அழைக்­கப்­பட்­டுள்­ளமை, தமிழ் ஆசி­ரி­யை­யிடம் சிங்­கள மொழியில் வாக்குமூலம் பெறப்­பட்­டுள்­ளமை போன்ற விட­யங்கள் மீது அவ­தானம் செலுத்தும் போது உண்­மை­யி­லேயே பாதிக்­கப்பட்ட அதி­ப­ருக்கு நியா­யத்தைப் பெற்­றுக்­கொ­டுக்க செயற்­ப­டுத்­த­ப்படும் விசா­ர­ணை­களும் அதன் போக்­கு­களும் சந்­தே­கிக்கும்படி­யா­கவே உள்­ளன. ஒரே ஒரு ஆறுதல் மனித உரி­மைகள் ஆணைக் குழு­வூ­டாக அந்த தடைகள் தொடர்பில் வெளிப்­ப­டுத்த முடி­யு­மாக இருப்­பது மட்­டுமே.

 இந்த சம்­ப­வத்தை தொடர்ந்து பாதிக்­கப்­பட்ட  பெண் அதி­ப­ரான பவானி பதுளை பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்டை மையப்­ப­டுத்தி  விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தாக  பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­தி­ருந்­தது. அதன்­படி மத்­திய மற்றும் ஊவா சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்­ர­ம­சிங்­கவின் மேற்­பார்­வையில் பதுளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.ஆர்.ஜி.எம்.பி. எல்­லே­பொல, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர்  ஏ.பி.டி. வீர­சே­கர ஆகி­யோரின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக பதுளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தலை­மை­யி­லான குழு­வினர் இது தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

 இதன் பல­னாக கடந்த 22 ஆம் திகதி பதுளை பொலிஸ் நிலை­யத்தில் ஊவா முத­ல­மைச்சர் சாமர சம்பத் தச­நா­யக்க சர­ணடைந்த நிலையில் அவ­ருக்கு நீதி­மன்றில் பிணையும் கிடைத்­தது. அவ­ருக்கு எதி­ராக அரச ஊழி­யரின் கட­மைக்கு இடை­யூறு விளை­வித்­தமை, அச்­சு­றுத்தல் விடுத்­தமை போன்ற குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்­தி­ருந்தார்.

 அப்ப­டி­யானால் பார­தூ­ர­மான இக்­குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் விசா­ரணை செய்யும் பதுளை பொலிஸார், இந்த சம்­ப­வத்தை மையப்­ப­டுத்தி பொதுமக்­க­ளி­டையே எந்த கொந்­த­ளிப்பும் இல்லை எனவும், முத­ல­மைச்­சரின் இல்­லத்தில் உள்ள சி.சி.ரி.வி. காட்­சிகள் அழிக்­கப்பட்­டுள்ள நிலையில் சாட்சி அழிப்பு குறித்து ஒருவார்த்­தை­யேனும் சொல்­லாது, முத­ல­மைச்சர் பிணை பெற்றுச்செல்­வ­தற்கு ஏது­வாக விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்­து ­வி­ட்­ட­தா­கவும்  நீதி­மன்­றுக்கு பொலிஸார் அறி­வித்­த­மை­யா­னது, முத­ல­மைச்­ச­ருக்கு பிணை பெற்­றுக்­கொ­டுக்கும் சதியின் செயற்­பா­டுகள் என்றே கரு­த­வேண்டும். அவ்­வாறு சதி இடம்­பெற்­றி­ருப்பின் அது பாதிக்­கப்­பட்ட அதி­ப­ருக்கு நியா­யத்தைப் பெற்­றுக்­கொ­டுக்கும் நட­வ­டிக்­கை­யினை தடை செய்யும் நட­வ­டிக்­கை­யா­கவே கருத வேண்­டி­யுள்­ளது.

இந் நிலை­யி­லேயே அதி­பரை முழந்­தா­ளிடச் செய்த விவ­காரம் தொடர்­பி­லான சம்­பவம் பொலிஸ் மற்றும் அர­சியல் பலத்தை வைத்து மூடி மறைக்­கப்­ப­டு­வ­தற்­கான முயற்­சிகள் எடுக்­க­ப்ப­டு­வ­தாக நாம் கரு­து­கின்றோம். குறிப்­பாக அதி­ப­ருக்கு நடந்த அநீ­திக்கு பொறுப்புக் கூற வேண்­டிய முதல் சந்­தேக நபர் முத­ல­மைச்சர் எனில் இரண்­டா­மவர் ஊவா மாகாண கல்விச் செயலர் ஆவார். ஊவா கல்விச் செயலர் சந்­தியா அம்­பன்­வெல முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒரு­வரின் மனை­வி­யாவார்.  இந் நிலையில் முத­ல­மைச்­ச­ரையும்  கல்விச் செய­ல­ரையும் காப்­பாற்ற அர­சியல், பொலிஸ் அதி­கார வர்க்கம் துடிப்­ப­தாக சந்­தே­கிக்க ஏது­வான கார­ணிகள் உள்­ளன. அதி­பரை முழந்­தா­ளிட வைத்த சம்­ப­வத்தின் பின்னர் அப்­ப­டி­யொன்றும் நடக்­கவே இல்லை என ஊட­கங்­க­ளிடம் கருத்துக் கூற அச்­சு­றுத்­தி­ய­தாக கூறப்­படும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒரு­வரின் மனை­வி­யான மாகாண கல்வி அமைச்சின் செயலர் சந்­தியா அம்­பன்­வல உள்­ளிட்­டோ­ருக்கு எதி­ரா­கவும் குற்­ற­வியல் விசா­ரணை அவ­சியம் எனவும் அவர்­களும் முத­ல­மைச்­ச­ருடன் சேர்த்து கைது செய்­யப்­பட வேண்­டி­ய­வரே. இதில் முத­ல­மைச்­சரின் கைக்­கூ­லி­க­ளாக செயற்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள் என கூறிக்­கொள்ளும் மூவர் ( மாகாண சபை ஊழி­யர்கள் ) தொடர்­பிலும் நட­வ­டிக்­கைகள் அவ­சி­ய­மாகும். விட இவ்­வி­வ­காரம் தொடர்பில்  பாரா­ளு­மன்றக் கட்­டி­டத்­தொ­கு­தியில், விசா­ரணை ஒன்று ஆரம்­பிக்­கப்பட்­டது. அந்த விசா­ர­ணை­களில்கூட அரச உத்­தி­யோ­கத்­தர்கள் அழைக்­கப்பட்ட போதும் முத­ல­மைச்சர் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­ப­ட­வில்லை. எனவேதான் அந்த விசா­ர­ணைகள் பாதிக்­கப்பட்ட அதி­ப­ருக்கு எந்த அளவு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்கும் என்­பதில் கேள்­வி­களை எழுப்பச் செய்­கின்­றது.

எவ்­வா­றா­யினும் அதி­பரை முழந்­தா­ளிடச் செய்த நட­வ­டிக்­கை­யினை முற்­றாக மறுத்­து­வரும்  முத­ல­மைச்சர் சாமர சம்பத் தச­நா­யக்க, தனது பெய­ருக்கு களங்­கத்­தினை ஏற்­ப­டுத்­தி­ய­வர்­க­ளுக்­கெ­தி­ராக 500 மில்­லியன் ரூபா நட்ட ஈடு கோரி  வழக்கு தாக்கல் செய்யப்போவ­தா­கவும், அது குறித்து சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் ஆலோ­சித்து வரு­வ­தா­கவும் தெரி­வித்து வரு­கின்றார்.

உண்­மையில் இந்த சம்­ப­வ­மா­னது கடந்த ஜன­வரி மூன்றாம் திகதி  முதலாம் தரத்­துக்­கான  அனு­மதி தொடர்பில் முத­ல­மைச்­சரின் கோரிக்­கையை அதிபர் நிரா­க­ரித்த சம்­ப­வத்தை மையப்­ப­டுத்தி, அதி­பரை முத­ல­மைச்­சரின் வாசஸ்­த­லத்­திற்கு வர­வ­ழைத்து  நிந்­தித்­தமை, அதி­பரை மண்­டி­யிட்டு மன்­னிப்பு கோர அழுத்தம் பிர­யோ­கித்­தமை தொடர்பில் ஊட­கங்கள் ஊடாக வெளிக்­கொ­ண­ரப்­பட்­ட­தை­ய­டுத்து இது தொடர்பில் சர்ச்சை வெடித்­தது.  

எனினும் இந்த சர்ச்­சை­க­ளி­டையே அதிபர் ஆர். பவா­னியின் வாக்குமூலம் ஒன்றும் ஊட­கங்­களில் வெளி­ப்ப­டுத்­தப்­பட்­டது. அதில்  முழந்­தா­ளிடச் செய்த சம்­பவம் ஒன்று நடக்­கவே இல்லை எனவும், முத­ல­மைச்­சரும் ஏனைய அதி­கா­ரி­களும் பாட­சா­லையின் ஒவ்­வொரு விட­யத்­திலும் அக்­க­றை­யுடன் செயற்­ப­டு­வ­தா­கவும், இது அர­சியல் பருவகாலம் என்­பதால் இவ்­வாறு ஒரு கதை சொல்­லப்­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கப்பட்­டி­ருந்­தது.

 எனினும் கடந்த வாரம்  அந்த வாக்கு மூல­மா­னது அச்­சு­றுத்திப் பெறப்­பட்­டது என்­பதை அதிபர் ஆர். பவானி வெளிப்ப­டுத்­தினார். 

' சுற்­ற­றிக்­கையின் பிர­கா­ரமே, 2018ஆம் ஆண்டு முதலாம் தரத்­துக்கு மாண­வி­களை சேர்த்­துக்­கொள்ளும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எங்­க­ளு­டைய பாட­சா­லையை பொறுத்­த­வ­ரையில் முஸ்­லிம்­க­ளுக்கு 8 சத­வீ­தமே ஒதுக்­கப்­படும். அத­ன­டிப்­ப­டை­யி­லேயே மாண­விகள் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­டனர்.

எனினும், இன்­னு­மிரு மாண­வி­களை சேர்த்­துக்­கொள்­ள­ வேண்­டு­மென, முத­ல­மைச்சர் சாமர சம்பத் கடி­த­மொன்றை அனுப்­பி­ வைத்­தி­ருந்தார். அவ்­வாறு கடி­தங்­க­ளுடன் வந்­தி­ருந்த இரு­வ­ரையும் அழைத்து, சுற்­ற­றிக்­கையை தெளி­வு­ப­டுத்­தினேன்.

இய­லாத பட்­சத்தில் மாகாண பணிப்­பாளர் அல்­லது மாகாண செய­லா­ள­ரிடம் கடி­தங்­களை பெற்­று ­வ­ரு­மாறு அவ்­வி­ரு­வ­ரையும் அனுப்­பி­ வைத்தேன். இதே­போன்­ற­தொரு பிரச்­சினை 2017 ஆம் ஆண்டின் போதும் தரம் ஒன்­றுக்கு மாண­வர்­களை சேர்த்­துக்­கொள்ளும்போது இடம்­பெற்­றது.

இந்­நி­லையில், ஜன­வரி 3 ஆம் திக­தி­யன்று தன்­னு­டைய காரி­யா­ல­யத்­துக்கு வரு­மாறு மாகாண செய­லாளர் என்னை அழைத்­தி­ருந்தார். நானும் சென்­றி­ருந்தேன். சிறி­து­நேரம் கழித்து முத­ல­மைச்­சரின் அலு­வ­ல­கத்­துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு, தங்­க­ளு­டைய பிள்­ளை­களை முதலாம் தரத்­துக்கு சேர்த்­துக்­கொள்­ளு­மாறு முத­ல­மைச்­சரின் கடி­தங்­க­ளுடன் பாட­சா­லைக்கு வந்­தி­ருந்த பெற்றோர் இரு­வரும் இருந்­தனர். மாகாண கல்விப் பணிப்­பா­ளரும் இருந்தார்.

கடு­மை­யான கோபம் கொண்­டி­ருந்த முத­ல­மைச்சர் சாமர சம்பத் தச­நா­யக்க,

“நான் 8ஆவது படிக்­கா­தவன் என்று தெரி­வித்­தீரா, உனக்கு இங்கு வேலை­யில்லை. ஏதா­வது தூர பிர­தே­ச­மொன்­றுக்கு இட­மாற்­றவும்” என, மாகாண கல்விப் பணிப்­பாளர் மற்றும் மாகாண செய­லா­ள­ருக்கு  கடு­மை­யான கட்­ட­ளை­யிட்டார்.

அத்­துடன், அவ்­விரு பெற்­றோர்கள் முன்­னி­லை­யிலும் முழங்­கா­லிட்டு, மன்­னிப்புக் கேட்­கு­மாறு கேட்டார்.

“என்­ மீ­தான குற்­றச்­சாட்­டுகள் அனைத்­தையும் நிரா­க­ரித்தேன். என்ன செய்­வ­தென்று தெரி­யாத நான், இறு­தியில் முழங்­கா­லிட்டேன். மன்­னிப்பு கேட்டேன். என் வாழ்க்­கையில் எப்­போதும் பொய் சொல்­லி­யது இல்லை. மாண­வி­களை சேர்க்கும் விவ­கா­ரத்தில் இன, மத, மொழி உள்­ளிட்ட வேறு­பா­டு­களை பார்க்­க­மாட்டேன். சுற்­ற­றிக்­கையின் பிர­கா­ரமே செயற்­ப­டுவேன். கடந்த காலங்­களில் செயற்­பட்டும் உள்ளேன். ஆளுநர் எவ்­வி­த­மான அழுத்­தங்­க­ளையும் பிர­யோ­கிக்­க­வில்லை” என்றேன்.

எனினும், என்­னு­டைய விளக்­கங்­க­ளுக்கு செவி­சாய்ப்­ப­தாக முத­ல­மைச்சர் அன்­றி­ருக்­க­வில்லை. தொழில் பயம், அச்சம் உள்­ளிட்­டவை கார­ண­மா­கவே, முழங்­கா­லிட்டு மன்­னிப்புக்கேட்டேன். அத­னை­விட என்னால் ஒன்­றுமே செய்­ய­மு­டி­யாது. எனினும், அவ்­வி­டத்தில் மாகாண கல்விப் பணிப்­பா­ளரும், மாகாண செய­லா­ளரும் இருந்­தனர். அங்கு நடந்­தவை என்­ன­வென்று அவர்­க­ளுக்குத் தெரியும்” என்றார்.

முத­ல­மைச்சர் காரி­யா­ல­யத்தில் நான் முகம்­கொ­டுத்த சம்­பவம் தொடர்பில், பாட­சா­லையின் லொக் புத்­த­கத்தில் அப்­ப­டியே பதி­விட்­டுள்ளேன்.

“நான், அச்­சு­றுத்­தப்­பட்­ட­தனால், அங்கு நடந்த சம்­ப­வத்தை முற்­றாக மாற்­றியே ஊட­கங்­க­ளுக்கு அன்று தெரி­வித்தேன். அன்று நடந்த சம்­பவம் எனது மன­நி­லையை வெகு­வாகப் பாதித்­து­விட்­டது. எனக்கும், எனது பாட­சா­லைக்கும் களங்கம் ஏற்­பட்­டதை எண்ணி மன­துக்­குள்­ளேயே  குமு­றிக்­கொண்­டி­ருக்­கின்றேன். 

“எனது உயி­ருக்கு ஆபத்து ஏற்­பட்டால், மாகாண முத­ல­மைச்சர், மாகாண கல்வி அமைச்சின் செய­லாளர் சந்­தியா அம்­பன்­வெல, மாகாண கல்விப் பணிப்­பாளர் ஆகி­யோரே பொறுப்­பேற்க வேண்டும்”  என குறித்த சம்­பவம் தொடர்பில் அதிபர் ஆர். பவானி பின்னர் நடந்­த­வை­களை ஒப்­பு­வித்தார்.

இவற்றை அவர் பொலிஸ் வாக்கு மூலத்­திலும், நேற்று முன்தினம் நடை­பெற்ற மனித உரிமை ஆணைக்குழுவின் விசா­ர­ணை­க­ளிலும்கூட குறிப்­பிட்­டுள்ளார்.

இந்த விசா­ர­ணைகள் மனித உரிமை ஆணைக்குழுவின் விசா­ரணைப் பணிப்­பாளர் நிஹால் சந்­ர­சி­றியின் நேரடி கட்­டுப்­பாட்டின் முன்­னி­லையில் இடம்­பெற்­றி­ருந்­தது.

இதன்­போது இந்த விசா­ர­ணை­க­ளுக்கு ஊவா கல்விச் செய­லாளர் சந்­தியா அம­பன்­வல ( விசா­ர­ணைகள் நிமித்தம் நேற்று முதல் அப்­ப­த­வியில் இருந்து அவரை இடை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊவா மாகாண ஆளுநரின் செயலர் தெரிவித்திருந்தார்), வலயக் கல்விப் பணிப்பாளர் ரத்நாயக்க, மாகாண சபை ஊழியர்களான ஊடகவியலாளர்கள் எனக் கூறப்படும் இருவர் உள்ளிட்டோர் ஆஜராகியிருந்தனர். 

பதுளை பிரிவின் கல்விப் பணிப்பாளர் சரத் ரணசிங்க மனித உரிமைகள் தொடர்பிலான விசாரணைக்கு ஆஜராகாது, தான் தேர்தல்கள் கடமையில் இருப்பதாக ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.  அத்துடன் பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் குறித்த விசாரணைகளுக்கு சமுகமளித்திருக்கவில்லை. மாற்றமாக அவர் சார்பில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் ஆஜராகியிருந்தார்.    

இந்த விசாரணைகளின் போது முதலமைச்சருக்கு பிணை பெற்றுக்கொடுக்கும் வகையில் பீ அறிக்கையை தயாரித்த பொலிஸார் அதனை திருத்தி உண்மையான பீ அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் எனவும், முதலமைச்சரின் வீட்டில் இருந்த சி.சி.ரி.வி. காட்சிகளை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கல்விச் செயலர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் இடை நிறுத்தப்பட உத்தரவிட வேண்டும் எனவும்  முறைப்பாட்டாளர்கள் சார்பில் ஆணைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 உன்மையில் நீதியான விசாரணைகள் இடம்பெறவேண்டுமாக இருந்தால் இந்த கோரிக்கைகள் அமுல் செய்யப்பட்டால் மட்டுமே அது சாத்தியப்படும் என்பது மட்டும் திண்ணம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right