இளையோர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
நியூசிலாந்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது.
குயின்ஸ்டவுனில் நடந்த இதன் காலிறுதியில் இந்திய – பங்களாதேஷ் அணிகள் மோதின.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.2 ஓவர்களில் 265 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதனையடுத்து 266 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 42.1 ஓவர்களில் 134 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் 131 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இளையோர் உலகக்கிண்ண அரையிறுதிக்கு முன்னேறியது.
எதிர்வரும் 30ஆம் திகதி கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதியில் இந்திய – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்திய -– பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இவ்விரு நாடுகளின் தேசிய அணிகள் மோதுகின்ற போட்டிகளில் உள்ள விறுவிறுப்பு இந்தப் போட்டிக்கும் தொற்றிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM