யுவதி ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டு விளக்கமறியவில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அங்குணுகொலபலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரினால் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே குறித்த இளைஞர் நேற்று தங்காலை பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பணியக விசேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் நேற்று மாலை தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே தங்காலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி பெப்ரவரி 2 ஆம் திகதி வரையில் குறித்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட யுவதியின் குறித்த முறைப்பாட்டில் தனது அனுமதியில்லாமல் தனது புகைப்படங்கள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை காதலன் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM