மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பிலான பிரச்சினை மற்றும் வைத்தியர்களின் தொழில் பிரச்சினைகளு க்கு அரசாங்கம் உரிய தீர்வினை பெற்றுத்தர தவறியுள்ளமை போன்ற காரணங்களை முன்வைத்து எதிர்வரும் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் தொடர் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றுக்கு செல்ல அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவிக்கையில்,
அரச வைத்தியர்களின் மேலதிக வேலைநேர கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள், வைத்தியசாலைகளில் நிலவும் பதவி வெற்றிடங்களுக்கு முறையான நியமனம் தொடர்பாக நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள பல வழி
களிலும் முயற்சித்தபோதும் சுகாதார அதிகாரிகள் அதற்குரிய முறையான எந்த பதிலையும் இதுவரை முன்வைக்க தவறியுள்ளனர். அத்துடன் மாலபே தனியார் மருத்துவ பீடத்தை கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முற்றாக நீக்கிவிடுவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
இருந்தபோதும் அரசாங்கம் சைட்டத்தை மூடிவிட்டு அதில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அத்துடன் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் நடவடிக்கைகள் தொடர்பில் எமது எதிர்ப்பினை பலமுறை முன்வைத்திருந்தோம். ஆனால் அவை கருத்தில் கொள்ளப்படவில்லை. இவ்வாறான நிலையில் இலங்கை மருத்துவசபை நிர்வாக தேர்தலின் பெறுபேறுகள் சுகாதார அமைச்சரின் செயற்பாடுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளன. இதன்மூலம் நாட்டில் இருக்கும் பெரும்பான்மையான வைத்தியர்கள் சைட்டம் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவளித்திருக்கின்றனர்.
எனவே அரசாங்கம் மாலபே தனியார் மருத்துவபீடத்தை மூடிவிட உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். வைத்தியர்கள் எதிர்நோக்கிவரும் தொழில் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை பெற்றுத்தர சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகள் எதிர்வரும் தினங்களுக்குள் முன்வராவிட்டால் எதிர்வரும் 30ஆம் திகதி எந்த தடைகள் வந்தாலும் நாடுபூராகவும் தொடர்போராட்டம் மேற்கொள்வோம். எமது போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு சுகாதார அமைச்சரும் அதிகாரிகளுமே பொறுப்புக்கூறவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM