பிரேசிலின் மணல் கோட்டை மன்னர்!!!

Published By: Digital Desk 7

23 Jan, 2018 | 10:58 AM
image

பிரேசில் நாட்டில் மன்னர் ஒருவர் கடற்கரையோரப் பகுதியில் மணல் கோட்டை அமைத்து 22 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.

பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனீரோவில் பாரா டா திஜூகா பகுதியை சேர்ந்த 44 வயதான மார்சியோ மி‌ஷயல் மடோலியாஸ் என்பவரே இவ்வாறு மணல் கோட்டை கட்டி அதன் மன்னராக வாழ்க்கை நடாத்தி வருகின்றார்.

மணல் சிற்பங்கள் செய்வதில் வல்லவரான மடோலியாஸ் சிறு வயதில் இருந்தே கடற்கரையில் வாழ்ந்து வந்துள்ளார்.

வேறு இடத்துக்கு செல்ல மனமில்லாத மடோலியாஸ்க்கு கடற்கரையோரம் வசிக்க அதிக அளவு வீட்டு வாடகை கொடுக்க வேண்டியிருந்தது.

எனவே அவரே தனக்காக அரண்மனையை கட்ட முடிவு செய்து, மணல் சிற்பங்கள் செய்யும் திறன் படைத்த மடோலியாஸ் அழகான மணல் அரண்மனையை கட்டியுள்ளார்

தான் கட்டிய அரண்மனையில் கடந்த 22 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். அது இடிந்து விழாமல் இருக்க அவ்வப்போது அரண்மனையின் மீது தண்ணீர் தெளித்து கொள்கிறார்.

இந்த மணல் கோட்டையை காண பலர் அங்கு வருகின்றனர். அவருடன் செல்பி எடுத்துக் கொள்கின்றனர். அவர் தலையில் கிரீடமும் செங்கோலும் வைத்துள்ளார். அவரை அனைவரும் மன்னர் என்றே அழைக்கின்றனர். இருந்தாலும் மணல் கோட்டையும், சில புத்தகங்கள் மட்டுமே இவரது சொத்தாக உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்