2017 ஆம் ஆண்டின் முதல் 11 மாத காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 10.4 பில்லியன் அமெரிக்க டொலரை பதிவு செய்துள்ளது.கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 10.82 சதவீத வளர்ச்சியாகும். குறித்த காலப்பகுதியில் சேவை ஏற்றுமதியானது 5.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து 3.36 பில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டியுள்ளது.
அதேபோல் ஏற்றுமதி வளர்ச்சிக்கு பிரதான காரணியாக கைத்தொழில் துறை விளங்கியது. அதன்படி 2017 ஆம் ஆண்டின் முதல் 11 மாத காலப்பகுதியில் கைத்தொழில் துறையானது மொத்த ஏற்றுமதியில் 42 சதவீத பங்கினை வகித்துள்ளது. இதில் விவசாயத்துறை 18 சதவீத பங்களிப்பையும் மீன்பிடித்துறை 42 சதவீத பங்களிப்பையும் வழங்கியுள்ளது.
மேலும் இக்காலப்பகுதியில் கைத்தொழில் துறை ஏற்றுமதி வருவாயானது 6.12 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 7,368 மில்லியன் அமெரிக்க டொலரை வருவாயாகnபதிவு செய்துள்ளது. இதில் தைத்த ஆடைகள் ஏற்றுமதி 2 சதவீத அதிகரிப்பையும் இறப்பர் சார் உற்பத்தி பொருட்கள் 8 சதவீத அதிகரிப்பையும் மின் இலத்திரனியல் சாதனங்கள் 17 சதவீத அதிகரிப்பையும் கடதாசி சார் பொருட்களின் ஏற்றுமதி 21 சதவீத அதிகரிப்பையும் பதிவு செய்துள்ளன.
GSP Plus வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைத்ததையடுத்து 2017 ஆம் ஆண்டின் முதல் 11 மாத காலப்பகுதியில் ஐரோப்பிய சந்தைக்கான ஆடை ஏற்றுமதி 2.21 சதவீத அதிகரிப்பை பதிவு செய்து 1,800.81 மில்லியன் அமெரிக்க டொலரை வருவாயாக பெற்றுள்ளது.
அதே போல் 2016 ஆம் ஆண்டின் குறித்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2017 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் கடலுணவு உற்பத்திகளின் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 116.90 சதவீத அதிகரிப்பை பதிவு செய்து 49.41 மில்லியன் அமெரிக்க டொலரை வருவாயாக ஈட்டியுள்ளது. இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு இலங்கையின் கடலுணவு ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கிக்கொள்ளப்பட்டமையே பிரதான காரணியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விவசாய துறையின் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய் 2016 ஆம் ஆண்டின் குறித்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2017 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் 18.40 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து 2,508.47 மில்லியன் அமெரிக்க டொலரை வருவாயாக ஈட்டுவதற்கு தேயிலை ஏற்றுமதி பெரும் பங்கிகை வகித்துள்ளது.
அதன்படி தேயிலை ஏற்றுமதி வருமானமானது குறித்த காலப்பகுதியில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 21.16 சதவீத அதிகரிப்பை பதிவு செய்து 1,386.2 மில்லியன் அமெரிக்க டொலரை வருவாயாக பெற்றுக்கொடுத்து இத்துறைக்கு பங்காற்றியுள்ளது.இந்த வளர்ச்சிக்கு இலங்கை தேயிலைக்கான உலக சந்தையில் ஏற்ப ட்ட அதிக கேள்வி மற்றும் அதன் கார ணமாக ஏற்பட்ட விலை உயர்வு என்பன காரணமாக அமைந்தன.
இலங்கையின் ஏற்றுமதி சந்தையில் அமெரிக்கா,இங்கிலாந்து,இந்தியா,ஜேர்மனி,சீனா, மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் மொத்த ஏற்றுமதியில் 55 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளன.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM