பிரதமரிடம் உள்ள அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் ஜனாதிபதி செயற்படவில்லை. எனினும் பிரதமரின் அதிகாரங்களுக்கு மேலாக ஜனாதிபதி தீர்மானம் எடுக்கவேண்டும் என அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த தெரிவித்தார்.
எமக்கு பொருளாதார அதிகாரங்களை கொடுத்தால் சரியான நாட்டினை நடத்திக்காட்டுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
நல்லாட்சி அரசாங்கத்திலும் மக்களுக்கு பல்வேறு வாழ்வாதார பிரச்சினைகள் உள்ளன. பொருளாதார ரீதியில் மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட பொருளாதார வேலைத்திட்டங்களின் சில மோசமான காரணிகளும் உள்ளன. வரி அறவீடுகள் மற்றும் திட்டமிடல் போன்றவற்றில் மக்களுக்கு பாதகமான காரணிகள் உள்ளடங்குகின்றன. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொருளாதார சபை உருவாக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன்னர் இவ்வாறான ஒரு சபை உருவாக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் கடந்த காலங்களில் பொருளாதார வேலைத்திட்டங்கள் அமைச்சரவையின் நேரடி தலையீட்டில் கொண்டுவரப்படவில்லை. மாறாக பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்ட பொருளாதார ஆலோசனைக்குழுவின் பணிப்பின் பெயரிலேயே இவை அமைச்சரவைக்கு கொண்டுவரப்பட்டன. ஆகவே இதில் சில குளறுபடுகள் உள்ள காரணத்தினாலும் அமைச்சரவைக்கு நேரடியாக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற காரணத்தினாலுமே ஜனாதிபதி இவ்வாறான நடவடிக்கையினை முன்னெடுத்தார். மக்களுக்கு பெருளாதார சுமை தெரியாத வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
எனினும் பிரதமரின் கீழ் உள்ள பொருளாதார அதிகாரங்களை முழுமையாக அபகரிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் ஜனாதிபதி எதையும் கூறவில்லை என நான் நினைக்கிறேன்.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் ஐக்கிய தேசியக் கட்சியை விடவும் சிறப்பாக பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்ல முடியும். சரியான வேலைத்திட்டங்களை செய்ய வேண்டும் என்றால் எம்மிடம் பொருளாதார தீர்மானங்களை கொடுத்தால் போதும். நாம் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் செய்தும் காட்டியுள்ளோம்.எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்கள் என்னவோ அதற்கமைய நாமும் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM