“பிர­த­மரின் அதி­கா­ரங்­களை கைப்­பற்றும் நோக்­க­மில்லை”

Published By: Robert

23 Jan, 2018 | 10:28 AM
image

பிர­த­ம­ரிடம் உள்ள அதி­கா­ரங்­களை பெற்­றுக்­கொள்ளும் நோக்­கத்தில் ஜனா­தி­பதி செயற்­ப­ட­வில்லை. எனினும் பிர­த­மரின் அதி­கா­ரங்­க­ளுக்கு மேலாக ஜனா­தி­பதி தீர்­மானம் எடுக்­க­வேண்டும் என அமைச்சர் சுசில் பிரே­ம்­ஜெ­யந்த தெரி­வித்தார். 

எமக்கு பொரு­ளா­தார அதி­கா­ரங்­களை கொடுத்தால் சரி­யான நாட்­டினை நடத்­திக்­காட்­டுவோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. 

இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில், 

நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் மக்­க­ளுக்கு பல்­வேறு வாழ்­வா­தார பிரச்­சி­னைகள் உள்­ளன. பொரு­ளா­தார ரீதியில் மக்கள் பல்­வேறு சிக்­கல்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். கடந்த காலங்­களில் முன்­வைக்­கப்­பட்ட பொரு­ளா­தார வேலைத்­திட்­டங்­களின் சில மோச­மான கார­ணி­களும் உள்­ளன. வரி அற­வீ­டுகள் மற்றும் திட்­ட­மிடல் போன்­ற­வற்றில் மக்­க­ளுக்கு பாத­க­மான கார­ணிகள் உள்­ள­டங்­கு­கின்­றன. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் பொரு­ளா­தார சபை உரு­வாக்­கப்­பட்­டது. மூன்று மாதங்­க­ளுக்கு முன்னர் இவ்­வா­றான ஒரு சபை உரு­வாக்­கப்­பட்டு அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து தீர்­மா­னங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

மேலும் கடந்த காலங்­களில் பொரு­ளா­தார வேலைத்­திட்­டங்கள்   அமைச்­ச­ர­வையின் நேரடி தலை­யீட்டில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. மாறாக பிர­தமர் தலை­மையில் அமைக்­கப்­பட்ட பொரு­ளா­தார ஆலோ­ச­னைக்­கு­ழுவின் பணிப்பின் பெய­ரி­லேயே இவை அமைச்­ச­ர­வைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டன. ஆகவே இதில் சில குள­று­ப­டுகள் உள்ள கார­ணத்­தி­னாலும் அமைச்­ச­ர­வைக்கு நேர­டி­யாக அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்டும் என்ற கார­ணத்­தி­னா­லுமே ஜனா­தி­பதி இவ்­வா­றான நட­வ­டிக்­கை­யினை முன்­னெ­டுத்தார். மக்­க­ளுக்கு பெரு­ளா­தார சுமை தெரி­யாத வகை­யி­லான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும். 

எனினும் பிர­த­மரின் கீழ் உள்ள பொரு­ளா­தார அதி­கா­ரங்­களை முழு­மை­யாக அப­க­ரிக்க வேண்டும் என்ற அர்த்­தத்தில் ஜனா­தி­பதி எதையும் கூற­வில்லை என நான் நினைக்­கிறேன். 

எனினும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினால் ஐக்­கிய தேசியக் கட்­சியை விடவும் சிறப்­பாக பொரு­ளா­தார வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து செல்ல முடியும். சரி­யான வேலைத்­திட்­டங்­களை செய்ய வேண்டும் என்றால் எம்மிடம் பொருளாதார தீர்மானங்களை கொடுத்தால் போதும். நாம் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் செய்தும் காட்டியுள்ளோம்.எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்கள் என்னவோ அதற்கமைய நாமும் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44