ஊறுபொக்க பிரதேசத்தில், வேறு நபருடன் தகாத உறவு வைத்திருந்த இளம் பெண்ணை, அவரது கணவர் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். இச்சம்பவம் நேற்று (19) இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் எரங்கா சந்தமாலி (27) என்ற இளம் பெண் என்று தெரியவந்துள்ளது.
ஊறுபொக்கயில் வாடகைக்கு வீடெடுத்துத் தங்கியிருந்த இத்தம்பதியரிடையே நேற்று இரவு கடும் வாக்குவாதம் மூண்டுள்ளது. சந்தமாலிக்கும் மற்றொருவருக்கும் இடையே தகாத உறவு இருப்பதாகக் கூறியே பிரச்சினை தோன்றியுள்ளது.
இதன்போது கடும் கோபத்துக்கு ஆளான சந்தமாலியின் கணவர், அங்கிருந்த மின்சார அடுப்பின் வயரினால் சந்தமாலியின் கழுத்தை இறுக்கி நெரித்துக் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தமாலியின் உடல் மாத்தறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது கணவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM