திருகோணமலையில், காலஞ்சென்ற பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு 25 இலட்சம் ரூபா கப்பம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், போம்ப கபிலவின் மனைவி இனோகாவும், ஹபரண ரஞ்ஜியின் குழுவினருக்கும் தொடர்பிருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களை மையப்படுத்தி கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர, திருமலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர்.எம்.ஜி.ஓ. பெரேரா ஆகியோரின் நேரடிக் கட்டுப்பாட்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.பி.ஜே. சந்ரகுமாரவின் வழிநடத்தலில் திருமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கடத்தல், கப்பம் பெற்ற சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவரின் படங்கள் அடங்கிய சி.சி.ரி.வி. காணொளிகளும் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் அவர்களைக் கைது செய்ய உதவுமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறித்த நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் திருமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 0718591174, 0262222227 எனும் தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது 026 2222222 எனும் பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்துக்கோ தகவல் தருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
திருமலை, நான்காம் மைல்கல் பகுதியைச் சேர்ந்த 23 வயதான வாலிபர், கடந்த 5 ஆம் திகதி மாலை தனது காதலியைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே கடத்திச் செல்லப்பட்டிருந்தார். குறித்த இளைஞரின் தந்தை, திருமலையில் பிரபல வர்த்தகராவார். சில வருடங்களுக்கு முன் அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இளைஞரின் தாய்க்கு கடந்த ஐந்தாம் திகதி இரவு கிடைத்த தொலைபேசி அழைப்பில், இளைஞரின் தந்தை பற்றிய சில விபரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வதற்காகவே இளைஞரைக் கடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடத்தல் விவகாரம் குறித்து பொலிஸாருக்குத் தெரிவிக்கக்கூடாது என்றும் தொலைபேசி அழைப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் இளைஞரின் தாய் திருகோணமலை பொலிஸில் தமது மகன் கடத்தப்பட்டமை குறித்து புகார் அளித்தார். அதன் அடிப்படையிலேயே பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
கடத்தப்பட்ட இளைஞன், கடந்த 8 ஆம் திகதி மாலை கம்பஹா, யக்கல - மிரிஸ்வத்தை பகுதியில் வைத்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும், கடத்தல் முறைப்பாடு தொடர்பில் திருமலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதால் அவரை திருகோணமலைக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை திருமலை பொலிஸார் முன்னெடுத்த நிலையில், குறித்த இளைஞன் 25 இலட்சம் ரூபா கப்பம் பெறப்பட்டதன் பின்னரேயே விடுவிக்கப்பட்டுள்ளமையை கண்டறிந்துள்ளனர். இது தொடர்பில் குறித்த இளைஞன் சரியான வாக்கு மூலங்களை பொலிஸாருக்கு வழங்காத நிலையில் கப்பம் பெற்றவர்களைக் கண்டறிய பொலி ஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர். திருமலை ஐஸ் மஞ்சு எனும் பாதாள உலக தலைவனினால் கொல்லப்பட்டதாக கூறப்படும் மற்றொரு பாதாள உலக தலைவனான கபில போம்ப என்பவரின் மனைவியான இனோக்காவும், ஹபரன ரஞ்சி எனும் பாதாள உலக தலைவனும் இணைந்து இக்கடத்தலை முன்னெடுத்திருக்கலாம் எனவும் அதற்கான சில ஆதாரங்கள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் கிழக்கு பிராந்திய பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
இந் நிலையிலேயே அது தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டு கிடைக்கப் பெற்றுள்ள சான்றுகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM