வாடகைக்கு வாங்கி அடகுவைத்தவர்கள் கைது

Published By: Devika

17 Jan, 2018 | 05:55 PM
image

வாடகைக்குப் பெற்ற வேன் ஒன்றை அடகு வைத்துப் பணம் பெற முயன்ற இருவரை தலவாக்கலை பொலிஸார் கைது செய்தனர். சந்தேக நபர்கள் இருவரும் தலவாக்கலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மத்துகமயைச் சேர்ந்த இவ்விருவரும் ஒரு மாதத்துக்கு முன், ஜா-எலையில், வாகனங்களை வாடகைக்கு வழங்கும் நிறுவனம் ஒன்றில் இருந்து குறித்த வேனை வாடகை அடிப்படையில் பெற்றுள்ளனர்.

அதே வேனை, தலவாக்கலை பகுதியில் உள்ள ஒரு வியாபாரியிடம் அடகு வைக்க அவர்கள் திட்டமிட்டனர். அதன்படி, குறித்த வியாபாரியிடம் தொலைபேசி மூலம் பேரம் பேசிய அவர்கள், 80 இலட்ச ரூபா பெறுமதியான வேனை அவசர தேவைக்காக 35 இலட்சங்களுக்கு அடகு வைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, வேன் குறித்த போலிப் பத்திரங்களை வியாபாரியிடம் கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுச் செல்வதற்காக வேனை தலவாக்கலைக்குச் செலுத்தினர்.

அதன்போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், போலி வாகனப் பத்திரங்களைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையிலேயே உண்மை வெளிவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை...

2025-01-14 19:55:32
news-image

எமது ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த...

2025-01-14 21:47:39
news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13
news-image

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம்...

2025-01-14 19:38:19
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது குறித்து...

2025-01-14 14:25:47
news-image

அம்பாறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

2025-01-14 19:23:03
news-image

ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்...

2025-01-14 19:03:31