இலங்கை, சிம்பாப்வே, பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதும் ஒருநாள் முக்கோணத் தொடர் இன்று பங்களாதேஷில் ஆரம்பமாகியது.
இந்தத் தொடரில் இன்று நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் போட்டியை நடத்தும் பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் மோதுகின்றன.
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சிம்பாப்வே அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 42 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இம்மூன்று அணிகளுக்கும் 2018ஆம் ஆண்டின் முதலாவது தொடர் இது என்பது விசேட அம்சமாகும். அதுமட்டுமன்றி இலங்கை -மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இது முக்கியமான போட்டித் தொடராகும்.
அதுமட்டுமன்றி இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்கவுக்கு இந்தத் தொடர் மிக மிக முக்கியமானதாகும்.
காரணம் பங்களாதேஷின் முன்னாள் பயிற்சியாளர் என்ற ரீதியில் இலங்கை அணியை பொறுப்பேற்ற பின் சந்திக்க ஹத்துருசிங்க எதிர்கொள்ளும் முதலாவது தொடரும் இதுவென்பதுதான்.
அதுமட்டுமன்றி கடந்த ஆண்டு சிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் ஆகிய இவ்விரு அணிகளும் இலங்கை அணியை இலங்கை மண்ணில் வைத்தே வீழ்த்தியிருந்தன.
அதனால் அந்தத் தோல்விகளுக்கு பதிலடி கொடுக்க இந்தத் தொடரை பயன்படுத்தும் இலங்கை.
அதேவேளை சிம்பாப்வே அணிக்கெதிராக இலங்கையில் நடைபெற்ற தொடரில் அடைந்த தோல்விக்குப் பின்னரே அஞ்சலோ மெத்தியூஸ் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
அதேபோல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்று சிம்பாப்வேவுடனேயே மோதப்போவதால் போட்டித் தொடர் கடும் சவாலாக அமைய வாய்ப்புள்ளது.
இதேநேரம் பங்களாதேஷும் தங்கள் நாட்டில் தொடரை இழக்க விரும்பாது. அதனால் அவர்களும் மற்றைய இரு அணிகளுக்கும் கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் முக்கோணத் தொடரை வெல்லப்போவது யார் என்று.
இலங்கை அணி விவரம்,
அஞ்சலோ மெத்தியூஸ், உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா, திஸர பெரேரா, அசேல குணரத்ன, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், துஷ்மந்த சாமிர, ஷெஹான் மதுசங்க, அகில தனஞ்சய, சந்தகன், வனிது ஹசரங்க ஆகியோர் 16 பேர் கொண்ட இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM