டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சிறுவன் மரணம்

Published By: Priyatharshan

14 Jan, 2018 | 12:17 PM
image

டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

டெங்குக் காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 வயதுடைய சிறுவனொருவனே நேற்று சனிக்கிழமை பிற்பகல் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 

ஏறாவூர் மிச்நகர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் 7ஆம் தரத்தில் கல்விகற்றுவந்த என். எம். எம். முஆத்  (வயது 12) என்ற மாணவனே  இவ்வாறு டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகி மரணமடைந்துள்ளார்.

குறித்த மாணவன் ஏறாவூர் அல்முனீறா பெண்கள் உயர் தரப் பாடசாலை அதிபர் என்.எம். மஹாத் என்பரின் புதல்வராவார்.

குறித்த மாணவன் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34