அமெரிக்காவில் குழந்தைகள் தூக்கமின்மையால் ஆண்டுதோறும் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 3,500 என புள்ளிவிபரம் ஒன்று வெளியாகியுள்ளது.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள இந்த புள்ளிவிபர அறிக்கையில்,
"1990களில் அமெரிக்கா முழுவதும் நடத்தப்பட்ட பாதுகாப்பான தூக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தினால் தூக்கமின்மையினால் ஏற்படும் இறப்புகள் சற்றே சரிவைக் கண்டன. ஆனால் 90களின் கடைசியில் அந்த சரிவு மந்தமாகி குழந்தைகளுக்கான ஆபத்து மீண்டும் தொடர்கிறது".
'துரதிர்ஷ்டவசமாக இந்த நாட்டில் தூக்கக் கலப்பு இறப்புகளால் பல குழந்தைகளை இழந்துள்ளோம். அது தடுக்கப்பட வேண்டும்' என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய இயக்குனர் பிரெண்டா பிட்ஸ்ஜெரால்ட் கூறியதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய அறிக்கை மேற்கோளிட்டு தெரிவித்துள்ளது.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் 2015ஆம் ஆண்டு மேற்கொண்ட கர்ப்பகால அபாய மதிப்பீட்டுக் கண்காணிப்பு ஆய்வறிக்கையின்படி தாய்மார்கள் உறங்கும் நிலை பாதுகாப்பற்றதாக இருப்பதாக கண்டறியப்பட்டது.
பாதுகாப்பற்ற தூக்கம் என்பது குழந்தை தந்தையிடத்திலோ அல்லது தாயிடத்திலோ அல்லது அவர்களது வயிற்றுப்பகுதியை ஒட்டி உறங்குவதைக் குறிக்கிறது. மென்மையான படுக்கைகளில் தலையணைகள், போர்வைகள், மரத் தொட்டில்கள், அடைக்கப்பட்ட பொம்மைகள் மற்றும் தூங்கும் நிலைப்பாடுகள் ஆகியவை அடங்கும்.
இந்த ஆய்வில் ஐந்து தாய்மார்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் குழந்தைகளை பக்கத்திலோ அல்லது வயிற்றை ஒட்டியோ படுக்கவைத்துக்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது.
அரைவாசிக்கும் மேற்பட்ட தாய்மார்கள் தங்கள் குழந்தைகளோடு படுக்கையை பகிர்ந்துகொள்வதும் 5:2 தாய்மார்கள் 38.5 % குழந்தைகள் படுக்கும் இடத்தில் மட்டும்மென்மையான படுக்கையை அமைத்துக்கொடுப்பதாக தெரிய வந்துள்ளது.
குழந்தை மருத்துவத்திற்கான அமெரிக்க அகாடமி "உறங்கும் குழந்தைகளுக்குக் கீழே பொம்மைகளோ அல்லது மென்மையான படுக்கையோ இல்லை எனவும், இரு பக்கமும் அடைபட்டிருக்கும் தொட்டிலில் குழந்தைகளை தூங்க வைப்பதில்லை எனவும் ஒவ்வொரு குடும்பமும் உறுதி செய்யவேண்டும்" என அறிவுறுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM