பத்திரிகைகளுடன் சென்ற லொறி விபத்து

Published By: Priyatharshan

11 Jan, 2018 | 09:35 AM
image

கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு பத்திரிகைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை சுரங்கப்பாதைக்கு அருகில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

லொறியின் சாரதிக்கு தூக்க மயக்கம் ஏற்பட்டதன் காரணமாக வீதியை விட்டு விலகி கற்பாறையின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லொறியில் சாரதியோடு உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய இவர்கள் பத்திரிகைகளை வேறொரு லொறிக்கு மாற்றம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அத்தோடு வீதி போக்குவரத்துக்கான பாதுகாப்பு சமிஞ்கைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21