சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பிரச்சினைக்கு அமைச்சர்களான லக் ஷ்மன் கிரியெல்ல மற்றும் ராஜித சேனாரத்னஆகியோரே பொறுப்புக் கூற வேண்டும். அரசியல்வாதிகளின் இரகசிய ஒப்பந்தங்களுக்கு எங்கள் பிள்ளைகளை பலியாக்க முடியாது என சைட்டம் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
சைட்டம் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் சங்கத்தினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சைட்டம் பிரச்சினை தொடர்பில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது எமது பிள்ளைகளேயாவர். அவர்களுக்கான தீர்வை வழங்குவதில் இந்த அரசாங்கம் காலம் தாழ்த்தி வருகிறது. சைட்டம் மருத்துவக் கல்லூரி பிரச்சினை ஆரம்பித்த காலப்பகுதியிலேயே அது தொடர்பான தீர்வினை காண்பதற்கான குழுவினை அமைக்கக் கோரி விண்ணப்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. எவ்வாறேனும் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு அரசாங்கம் தீர்வினை வழங்க தாமதிக்கும் பட்சத்தில் அரசாங்கத்துக்கு எதிரான எமது போராட்டம் தொடரும் என்றார்.
இதேவேளை, சைட்டம் மருத்துவக் கல்லூரியை இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கீழ் செயற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது சைட்டம் மருத்துவக் கல்லூரியை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் ஆரம்பக்கட்ட மறைமுக நோக்கம் என இலங்கை மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
சைட்டம் கல்லூரி தொடர்பாக நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத் துத் தெரிவிக்கையில்,
சைட்டம் மருத்துவக் கல்லூரியை கடந்த வருடம் தடை செய்வதாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. எனினும் தற்போது மீண்டும் அதனை நடைமுறைப்படுத்தும் வகையிலான செயற்றிட்டங்களை இவ்வரசாங்கம் மேற்கொண்டு வருகின்றன. அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடு கள் தொடர்ந்தும் நீடிக்குமானால் அரசாங்கத்துக்கு எதிரான எமது போராட்டமும் தொடரும்.
மேலும் இதன் காரணமாக தேர்தல் காலத்தில் அரசாங்கம் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். அதேவேளை சைட்டம் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தர முன்வரும் கட்சிக்கும் வேட்பாளருக்குமே இம்முறை தேர்தலில் நாம் வாக்களிப்போம். அரசாங்கம் அதற்கான தீர்வினை வழங்காவிட்டால் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். பெப்ரவரி 10 தேர்தலின் பின்னரும் இதற்கான தீர்வு கிடைக்காத பட்சத்தில் உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொள்வதற்கும் நாம் தயாராக உள்ளோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM