இலங்கை அணி விளையாடும் தொடர்களில் இறுதி பதினொருவரை முடிவுசெய்யும் உரிமையை தலைமைப் பயிற்சியாளருக்கு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம். இதற்காக நேற்று விசேட பொதுக்கூட்டத்தை கூட்டி இந்த முடிவு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அத்தோடு இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய செயலாளராக விமானப்படையின் எயார் கொமடோர் ரொஷான் பியன்வெலவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே செயலாளராக இருந்த மொஹான் டி சில்வா உப தலைவராகவும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளின் பிரதானியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த விசேட பொதுக்கூட்டம் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தில் நேற்றுக் காலை நடைபெற்றது. அதன்பின் ஊடகவியலாளர்களை சந்தித்த இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத் தலைவர், பொதுக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து அறிவித்தார்.
இலங்கைக் கிரிக்கெட் அணி கடந்த காலங்களில் கடும் பின்னடைவை சந்தித்து வந்தது. இந்த பின்னடைவிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியை மீட்டெடுக்க இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் புதிய தலைமைப் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரரும், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான சந்திக்க ஹத்துருசிங்கவை நியமித்தது.
சந்திக்க ஹத்துருசிங்கவின் தலைமையின் கீழ் பயிற்சிகளை மேற்கொண்டுவரும் இலங்கை அணி எதிர்வரும் 13ஆம் திகதி பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள் முக் கோணத் தொடரில் விளையாடவுள்ளது.
பொதுவாக இலங்கைக் கிரிக்கெட் அணியை தேர்வுசெய்யும் உரிமை தேர்வுக்குழுவுக்கே இதுவரையில் இருந்தது.
தற்போதைய புதிய திருத்தத்தின்படி விளையாடும் பதினொருவரை பயிற்சியாளரும் சேர்ந்து தேர்வுசெய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது விளையாடும் பதினொருவரை தெரிவு செய்யும் குழுவில் தலைமைப் பயிற்சியாளர், அணித் தலைவர் மற்றும் அணி முகாமையாளர் ஆகியோர் செயற்படுவர்.
இவர்கள் மூவரும் கலந்தாலோசித்து யார் யார் குறிப்பிட்ட போட்டிக்குத் தேவை என்பதை முடிவுசெய்வர்.
இதேவேளை இந்த விசேட பொதுக்கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட 2006/13 மற்றும் 2017/41 வர்த்தமானி அறிவித்தலின் படி குறித்த ஒழுங்குவிதிகளை கிரிக்கெட் யாப்பில் உள்ளடக்கவும் இதன்போது முடிவுசெய்யப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM