பாரிஸுக்கு நடந்ததுதான் வாஷிங்டனுக்கும், சிரியாவில் தாக்குதல் நடத்தும் மற்ற நாடுகளுக்கும் நடக்கும் என்று மிரட்டும் வீடியோ ஒன்றை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது.
கடந்த 14ஆம் திகதி நள்ளிரவு பாரிஸில் நடத்தப்பட்ட தாக்குதலில் 129 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது.
இந்நிலையில் பாரிஸில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டுவீசி அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. பிரான்ஸ் தவிர அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் அங்கு தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், இந்நாடுகளை மிரட்டும் வீடியோ ஒன்றை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் “சிரியாவில் நடந்து கொண்டிருக்கும் கொடூரமான தாக்குதலில் பங்கேற்கும் நாடுகளே, கடவுளின் ஆணைப்படி பிரான்ஸின் மையப்பகுதியான பாரிசை எப்படி தாக்கினோமோ அதேபோல் அமெரிக்காவின் மையமான வாஷிங்டனையும் தாக்குவோம்” என்று ஒரு ஐ.எஸ் தீவிரவாதி கூறுகிறார். ஐ.எஸ். அமைப்பின் இந்தப் புதிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM