வவுனியா நெளுக்குளம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஊர்மிளாக்கோட்டம் பகுதியில் சீனிப்பாணியினை காய்ச்சி தேன் என விற்பனை செய்த பெண் உட்பட இருவரை கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா நெளுக்குளம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஊர்மிளாக்கோட்டம் பகுதியில் சீனிப்பாணியினை காய்ச்சி தேன் என விற்பனை செய்வதாக வவுனியா சுகாதார பரிசோதர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் தியாகலிங்கம், பொது சுகாதார பரிசோதகர் வோல்ட்டயன் ஆகியோரின் தலைமையிலான குழுவினர் நெளுக்குளம் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது ஊர்மிளாக்கோட்டம் பகுதியில் வீடொன்றில் சீனிப்பாணி காய்ச்சிய 38 வயதுடைய பெண்ணொருவரையும் 26 வயதுடைய ஆணொருவரையும் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து போத்தலின் தேன் என அடைக்கப்பட்டிருந்த 73 போத்தல் சீனிப்பாணியையும் சுகாதார சீர்கேடான முறையில் காய்ச்சப்பட்ட 2 அரை பீப்பாய் சீனிப்பாணியையும் பட்டா வாகனமொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு நபர்களையும் வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது நாளை திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM