திருகோணமலையில், காலஞ்சென்ற வர்த்தகர் ஒருவரின் மகன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதையடுத்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
திருமலை, நான்காம் மைல் கல் பகுதியைச் சேர்ந்த இந்த 23 வாலிபர், நேற்று (5) மாலை தனது காதலியைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞரின் தந்தை, திருமலையில் பிரபல வர்த்தகராவார். சில வருடங்களுக்கு முன் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இளைஞரின் தாய்க்கு நேற்றிரவு கிடைத்த தொலைபேசி அழைப்பில், இளைஞரின் தந்தை பற்றிய சில விபரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வதற்காகவே இளைஞரைக் கடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடத்தல் விவகாரம் குறித்து பொலிஸாருக்குத் தெரிவிக்கக் கூடாது என்றும் தொலைபேசி அழைப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும் இளைஞரின் தாய் திருகோணமலை பொலிஸில் தமது மகன் கடத்தப்பட்டமை குறித்து புகார் அளித்தார். அதன் அடிப்படையிலேயே பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM