திருமலை: தந்தை பற்றித் தெரிந்துகொள்ள மகனைக் கடத்திய மர்ம நபர்கள்

Published By: Devika

06 Jan, 2018 | 02:45 PM
image

திருகோணமலையில், காலஞ்சென்ற வர்த்தகர் ஒருவரின் மகன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதையடுத்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

திருமலை, நான்காம் மைல் கல் பகுதியைச் சேர்ந்த இந்த 23 வாலிபர், நேற்று (5) மாலை தனது காதலியைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரின் தந்தை, திருமலையில் பிரபல வர்த்தகராவார். சில வருடங்களுக்கு முன் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இளைஞரின் தாய்க்கு நேற்றிரவு கிடைத்த தொலைபேசி அழைப்பில், இளைஞரின் தந்தை பற்றிய சில விபரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வதற்காகவே இளைஞரைக் கடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தல் விவகாரம் குறித்து பொலிஸாருக்குத் தெரிவிக்கக் கூடாது என்றும் தொலைபேசி அழைப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும் இளைஞரின் தாய் திருகோணமலை பொலிஸில் தமது மகன் கடத்தப்பட்டமை குறித்து புகார் அளித்தார். அதன் அடிப்படையிலேயே பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10