ஈ.பி.டி.பி. கட்சியின் முன்னாள் யாழ். மாநகர சபை உறுப்பினரும் தற்போதைய யாழ்.மாநகர சபை வேட்பாளருமான சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட நால்வர் மீது முன்வைக்கப்பட்ட 116 பவுண் திருட்டு நகைகளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் அவற்றை அடகு வைக்க முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் அவர்களை குற்றவாளிகளாக இனங்கண்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் வங்கி யொன்றில் அடகு வைப்பதற்கு சுதர்சிங் விஜயகாந்த் சென்றிருந்தார். அந்த வங்கியில் கடமையாற்றும் அலுவலரின் திருட்டுப்போன நகை சுதர்சிங் விஜயகாந்திடம் காணப்ப ட்டது. அதுதொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் விசாரணைகளை முன் னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் விஜய காந்த் உள்ளிட்ட நான்குபேரை கைது செய்தனர். தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் நான்குபேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். விஜயகாந்த் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் 116 பவுண் நகைகளை திருடியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கோப்பாய் பொலிஸார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்
திருந்தனர். இதனடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வந்தநிலையில் நேற்று முன்தினம் தீர்ப்புக்காக திகதியிட ப்பட்டது. சந்தேகநபர்கள் நால்வர் மீதான திருட்டு குற்றச்சாட்டு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட வில்லை. சந்தேகநபர்கள் திருட்டு நகைகளை உட மையில் வைத்திருந்தமை மற்றும் அவற்றை அடகுவைக்க முற்பட்டமை உள்ளி ட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து நான்கு குற்றவாளிகளுக்குமான தண்டனை தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வழங்கப்படும் என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதி வான் சின்னத்துரை சதீஸ்தரன் தெரிவித்தார்.
விஜயகாந்தின் இந்த நடவடிக்கையால் அவரை தமது கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஈ.பி.டி.பி. நீக்கியது. இதனால் அவர் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியை ஆரம்பித்தார். தற்போது அவரது கட்சி தமிழர் விடுதலை கூட்ட ணியுடன் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் யாழ். மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM