தேசிய அர­சாங்­கமா? நாட்டின் எதிர்­கா­லமா? முக்கியம் ; மோச­டி­யா­ளர்­களை தண்­டித்தே தீருவோம்

Published By: Priyatharshan

06 Jan, 2018 | 08:41 AM
image

தேசிய அர­சாங்­கமா? நாட்டின் எதிர்­கா­லமா? என்று வந்தால் நிச்­சயம் நாட்டின் நலன் கரு­தியே செயற்­ப­டுவோம். எனவே, முன்னாள் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க, முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் மற்றும் பேப்­பச்­சுவல் நிறு­வ­னத்தின் அர்ஜுன் அலோ­சியஸ் ஆகி­யோ­ருக்கு எதி­ராக குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­படும் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தெரி­வித்­துள்­ளது. 

ஆத­ர­வையும் பாரா­ளு­மன்­றத்தில் சுதந்­திர கட்சி வழங்கும். எனவே மோச­டிக்­கா­ரர்கள் தப்­பிக்க வாய்ப்­பில்லை. பொறுப்பு கூறும் விட­யத்தில் இருந்து யாரும் தப்­பிக்­கவும் முடி­யாது. குற்­ற­நி­லையை உணர்ந்து ரவி கரு­ணா­நா­யக்க பதவி வில­கினார். அர்ஜுன மகேந்­தி­ரனை பத­வியில் அமர்த்­தி­ய­வரை வில­கு­மாறு எம்மால் கூற முடி­யாது எனவும்  அக்­கட்சி குறிப்­பிட்­டுள்­ளது.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. இதன் போது உரை­யாற்­றிய கட்­சியின் முக்­கி­யஸ்­தரும்  அமைச்­ச­ரு­மான   சுசில் பிரே­ம­ஜ­யந்த கூறு­கையில் ,

உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­த­லுக்­கான பிர­சார நட­வ­டிக்­கைகளில் அனைத்து கட்­சி­களும் தீவி­ர­மாக செயற்­பட ஆரம்­பித்­துள்­ளன. அந்த வகையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி எதிர்­வரும் 10 ஆம் திகதி புதன் கிழமை அநு­ரா­த­பு­ரத்தில் பிர­சார நட­வ­டிக்­கைகளை ஆரம்­பிக்க உள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார். 

  ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மலை­ய­கத்தில் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் மற்றும் கிழக்கில் பங்­காளி கட்­சி­க­ளுடன் கூட்­ட­ணி­ய­மைத்து தேர்­தலில் போட்­டி­யிட உள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் தேசிய அர­சி­யலில் பல்­வேறு திருப்­பங்­களை ஏற்­ப­டுத்தும் வகையில் மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான விசா­ரணை அறிக்கை அமைந்­துள்­ளது. 

அந்த அறிக்­கையில் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது குறித்து ஜனா­தி­ப­தியும் விஷேட அறி­விப்பு ஒன்றை விடுத்­துள்ளார். 2015 ஆம் ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 27 ஆம் திகதி இடம்­பெற்ற சர்ச்­சைக்­குரிய மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தேசிய பொரு­ளா­தா­ரத்­திற்கு   பாரி­ய­ளவில் தாக்கம் செய்­துள்­ளது. இந்த மோச­டியில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கும்­போது  அதனை தடுக்கும் வகையில் பல்­வேறு செயற்­பா­டு­களும் காணப்­பட்­டன. 

மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தை எளி­தாக கருத முடி­யாது . அந்த மோசடி சம்­பவம் இடம்­பெ­று­வ­தற்கு முன்னர் பல தயார்ப்­ப­டுத்­தல்கள் காணப்­பட்­டுள்­ளன. 1973 ஆம் ஆண்­டிற்கு பின்னர் நிதி­ய­மைச்சின் நிர்­வாக கட்­ட­மைப்பில் மாற்­றங்கள் கொண்டு வரப்­பட்­டது. நிதி அமைச்சின் கீழ் காணப்­பட்ட திறை­சேரி, சுங்கம் , நிதி திட்­ட­மிடல் மற்றும் மத்­திய வங்கி ஆகிய துறைகள் மற்­றொரு அமைச்­சுக்கும் மாற்­றப்­பட்­டன. அதா­வது நிதி திட்­ட­மிடல் மற்றும் மத்­திய வங்கி ஆகிய துறைகள் அரச தொழில் முயற்சி மற்றும் அபி­வி­ருத்தி அமைச்சின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டன. 

இத­னா­லேயே முன்னாள் நிதி அமைச்சர் மத்­திய வங்கி எனது அமைச்சின் கீழ் இல்லை என பிரச்­சி­னை­யி­லி­ருந்து தப்­பிக்கும் வகையில் கருத்து தெரி­வித்­துள்ளார். ஆனால் நாட்­டிற்கு ஏற்­பட்ட பாரிய இழப்பு குறித்து நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்­பதே சுதந்­திர கட்­சியின் நிலைப்­பா­டாகும். மத்­திய வங்­கிக்கு புதிய ஆளுநர் ஒரு­வரை   நிய­மிக்­காமல் பிணை­முறி விவ­காரம் குறித்து விசா­ரணை செய்ய ஜனா­தி­பதி ஆணைக்­குழு அமைக்­கப்­பட்­டி­ருந்தால் உண்­மைகள் வெளி­வந்­தி­ருக்­காது. 

தேசிய பொரு­ளா­தா­ரத்தின் கேந்­திர நிலை­ய­மான மத்­திய வங்­கிக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட பாதிப்­பிற்கு சம்பந்­தப்­பட்ட அனை­வரும் பொறுப்­புக்­கூற வேண்டும். இத­ன­டிப்­ப­டையில் அனை­வ­ருக்கு எதி­ரா­கவும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட உள்­ளது. அனைத்து சாட்சி விசா­ர­ணை­க­ளையும் சட்­ட­மா­திபர் திணைக்­களம் முன்­னெ­டுத்­த­மை­யினால் நீதி­மன்ற நட­வ­டிக்­கைக்கு தாமத நிலை ஏற்­பட வாய்ப்பு இல்லை. 

எனவே முன்னாள் நிதி­ய­மைச்சர் ரவி கருணா­நா­யக்க, முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்­திரன் மற்றும் பேப்­பச்­சுவல் நிறு­வ­னத்தின் அர்ஜுன் அலோ­சியஸ் ஆகி­யோ­ருக்கு எதி­ராக குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­படும். விசா­ரணை அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ள­வாறு தேவைப்­படின் கடந்த காலத்­திற்கும் செல்­லு­ப­டி­யாகும் வகையில் சட்­டங்கள் நிறை­வேற்­றப்­பட்டு சம்பந்­த­ப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். 

இதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் பாராளுமன்றத்தில் சுதந்திர கட்சி வழங்கும். எனவே மோசடிக்காரர்கள் தப்பிக்க வாய்ப்பில்லை. பொறுப்பு கூறும் விடயத்தில் இருந்து யாரும் தப்பித்து விட முடியாது. குற்றநிலையை உணர்ந்து ரவி கருணாநாயக்க பதவி விலகினார். அர்ஜுன மகேந்திரனை பதவியில் அமர்த்தியவரை விலகுமாறு எம்மால் கூற முடியாது. ஆனால் தேசிய அரசாங்கமா ? நாட்டின் எதிர்காலமா ? என்று வந்தால் நிச்சயம் நாட்டின் நலன் கருதியே செயற்படுவோம் என தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47