கடத்திச் சென்ற மாணவியை புதுவருட பிறப்பின் பின்னர் ஒப்படைப்பதாக கூறிய மொடலிங் வடிவமைப்பாளர்!!!

Published By: Digital Desk 7

05 Jan, 2018 | 01:46 PM
image

அநுராதபுரம் - எலயாபத்துவ பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை அவரது உறவினரான மொடலிங் வடிவமைப்பாளர் கடந்த 27ஆம் திகதி கடத்திச் சென்றுள்ளார்.

கடத்திச் செல்லப்பட்ட மாணவியும் குறித்த நபரும் கடந்த மூன்று வருடங்களாக காதல் தொடர்பை வளர்த்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தனது மகளை எங்கு தேடியும் காணாத குறித்த மாணவியின் தந்தை அநுராதபுர பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய தீவிர விசாரணை நடத்திய பொலிஸார் குறித்த நபர் மாணவியை அவரது சகோதரியின் வீட்டிற்கு கடத்திச் சென்றமை தெரிய வந்தள்ளது.

சகோதரியின் வீட்டிற்கு அழைப்பை ஏற்படுத்திய பொலிஸார் சகோதரனையும் சிறுமியையும் உடனடியாக பொலிஸில் ஆஜர்படுத்துமாறு கூற அதற்கு சகோதரி “புது வருடத்தின் பிறகு இருவரையும் அனுப்பி வைப்பதாக” கூறி அழைப்பை துண்டித்துள்ளனர்.

அதன் பிறகு பொலிஸார் குறித்த சகோதரியின் வீட்டிற்கு சென்று பொலிஸாரின் கட்டளையை மதிக்காத சகோதரியையும் மாணவியை கடத்திய சகோதரனையும் கைது செய்துள்ளனர்.

இருவரையும் கைது செய்த பொலிஸார், மாணவியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் எடுத்து குறித்த மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளாரா? என்பதை பரிசோதிக்க அநுராதபுர போதனா வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்தியரிடம் அனுப்பி வைத்துள்ளனர்.

18 வயதிற்குட்பட்ட சிறுமியின் உறவினராக இருந்த போதும் சட்டரீதியாக பாதுகாவலர் உரிமம் இல்லாது அழைத்துச் சென்ற குற்றத்திற்காக குறித்த மொடலிங் வடிவமைப்பாளரையும், அதற்கு துணைபோன சகோதரியையும் பொலிஸார் நீதி மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50