காத்தான்குடியில் பொதுச் சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல் : இருவர் கைது

Published By: Priyatharshan

05 Jan, 2018 | 10:08 AM
image

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் டெங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் இருவர் காத்தான்குடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் காத்தான்குடியில் விசேட டெங்கு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

காத்தான்குடியில் ஒரு வாரத்தில் இரு சிறுமியர் டெங்கினால் உயிரிழந்துள்ள நிலையில் காத்தான்குடி பிரதேசம் டெங்கு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான பொதுச்சுகாதார பரிசோதகர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் இருவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தமது பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் கூடி தீர்மானிக்கவுள்ளதாக அச்சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51