மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாகத்தில் பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் தலைமையில் இன்று நடைபெற்ற விசேட கூட்டத்தின்போது , காத்தான்குடி பிரதேசம் டெங்கு அபாய பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இதன்போது காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி யு.எல்.நசிர்தீன், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்தியர் எம்.எஸ்.ஜாபீர், காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி றிப்கா ஷபீன், பொலிஸார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
காத்தான்குடியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவை டெங்கு அபாய பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படுவதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 117 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியதாக காத்தான்குடி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM