சமய வழிபாட்டில் ஈடுபட்டதால் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணித் தாய் மரணம்

Published By: Priyatharshan

04 Jan, 2018 | 10:21 AM
image

கர்ப்பிணித் தாயொருவர் பிரசவ வலியால் வேதனைப்பட்டுக்கொண்டிருந்தபோது அயலவர்கள் கூடி சமய வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தமையால் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் தோட்டத்தில் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கர்ப்பிணித் தாயொருவர் பிரசவ வலியால் வேதனைப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், அவரை உரிய நேரத்திற்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமையினால் அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த கர்ப்பிணித்தாய் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போதே இறந்திருந்ததாகவும் சடலமானது பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக லிந்துல வைத்தியசாலையின் வைத்தியரொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, கர்ப்பிணித் தாய் வலியால் துடித்த போது அயலவர்கள் உடனடியாக தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்ததுடன் தோட்டத்திற்கு சொந்தமான அம்பியுலன்ஸ் வாகனம் வந்த போதிலும் கர்ப்பிணித் தாயை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் காலதாமதமாக்கியுள்ளதாகவும் குறித்த கர்ப்பிணித் தாயின் வலியை  குணமாக்குவதற்காக சிலர் சமய வழிபாட்டில் ஈடுபட்டமையே கால தாமதத்திற்கு காரணம் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46