தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளையாட்டில் திறமையை நம்பியே போட்டியிடவேண்டும் என்பதை மக்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நடைபவனியொன்றை நடத்த இலங்கை தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இந் நடைபவனி எதிர்வரும் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு கொழும்பு தாமரைத் தடாக அரங்கின் அருகிலிருந்து ஆரம்பமாகி சுதந்திர சதுக்கம் வரை சென்றுஅங்கு விசேட விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொள்ளவுள் ளதாக தெரிவிக்கப்படுகிறது.
து குறித்து ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தும் நிகழ்வு நேற்று அரசாங்க தகவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் பேசிய இலங்கை தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தின் தலைவர் டொக்டர் அர்ஜுன டீ சில்வா, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்துவதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு இதுவரை எந்த நாட்டிலும் நடைபெறவில்லையென்றே நினைக்கிறேன்.
ஊக்கமருந்து குறித்து பாடசாலை மட்டத்தில் விளையாடும் வீரர்களுக்குத்தான் முக்கியமாக எமது விழிப்புணர்வு சென்று சேர வேண்டும். காரணம் அவர்களிடமிருந்து ஆரம்பித்தால்தான் சர்வதேச அளவில் நாம் செல்லும்போது அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
ஆனால் நம்மைப் பொறுத்தவரையில் இதுமிக மிக முக்கியம். நமது வீரர்கள் தங்களுடைய திறமையை நம்பித்தான் போட்டியில் கலந்துகொள்ளவேண்டுமே தவிர ஊக்கமருந்துகளை நம்பி அல்ல. ஊக்கமருந்து உட்கொண்ட மாத்திரத்தில் போட்டியில் ஜெயித்துவிடலாம் என்றும் சொல்ல முடியாது.
எதிர்காலத்தில் தடகள வீரர்களுக்காக ஒரு கடவுச்சீட்டு வழங்கப்படவுள்ளது. இது சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு நிறுவனமான வாடாவினால் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு Athlete Biological Passport என்று பெயர். இதில் வீரர்கள் பயன்படுத்திய அத்தனை மருந்து வகைகளின் தன்மையும் பதியப்பட்டிருக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM