தாலிக்கொடியைத் திருடி அடகுவைத்த நபர் கைது

Published By: Robert

08 Feb, 2016 | 01:15 PM
image

நான்கு பவுண் தாலிக்கொடியைத் திருடி வங்கியில் அடகு வைத்த நபர் ஒருவரை கைது செய்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி சீநோர் வீட்டுத்திட்டப் பகுதியில் வைத்து திருட்டில் ஈடுபட்ட 33 வயதான இளம் குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொம்மாதுறை வாசிகசாலை வீதியிலுள்ள வீட்டில் யாருமில்லாத வேளை பார்த்து அங்கு சென்ற மேற்படி நபர் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனிடம் தனது சைக்கிளைக் கொடுத்து ஓடிப் பழகச் சொல்லி விட்டு வீட்டிற்குள் புகுந்து பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 பவுண் தாலிக்கொடியை திருடிச்சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதையடுத்து பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை விசாரித்த போது அவர் திருடிச் சென்ற தாலிக் கொடியை செங்கலடியிலுள்ள வங்கியொன்றில் அடகு வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10