புத்தாண்டு தினத்தன்று நாள் குறிக்கப்பட்டிருந்த குழந்தையின் உயிர்!

Published By: Devika

02 Jan, 2018 | 03:06 PM
image

வெட்டப்பட்டுக்கொண்டிருந்த மரம் எதிர்பாராதவிதமாக முறிந்து விழுந்ததில் மூன்று வயதுப் பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்தது.

ஒஷாதி மதுபாஷினி என்ற இந்தக் குழந்தை, தனது பெற்றோர், சகோதரனுடன் புதுவருட பிறப்பை முன்னிட்டு தனது தாத்தா-பாட்டியின் வீட்டுக்குச் சென்றிருந்தது.

புத்தாண்டு தினமான நேற்று குழந்தையை அதன் பதினொரு வயது சகோதரனின் பராமரிப்பில் விட்டுவிட்டு அதன் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர்.

அப்போது, தோட்டத்தில் மரம் வெட்டுவதைப் பார்க்க விரும்பிய அந்தக் குழந்தை, மரம் வெட்டப்பட்டுக்கொண்டிருந்த இடத்துக்குச் சென்றிருந்தது.

அப்போது, எதிர்பாராத விதமாக மரம் முறிந்து குழந்தையின் மீது விழுந்துள்ளது. இதில் அக்குழந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்தத் திடீர் விபத்தால் மரத்தைத் தறித்துக்கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியுற்றனர். அத்துடன், தம் மீது பழி விழுந்துவிடும் என்ற பயத்தில் அவர்கள் குழந்தையை அதன் சகோதரனிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.

தகவலறிந்த பெற்றோர் உடனடியாக வீடு திரும்பி, குழந்தையை ஹோமாகமை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டது.

அங்கு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டபோதும் அது பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து மீப்பே பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தாண்டு தினத்தன்று இடம்பெற்ற இத்துக்ககரமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு நீதிபதி நாட்டைவிட்டு செல்லும் அளவுக்கு...

2023-10-03 19:23:40
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம்...

2023-10-03 17:28:52
news-image

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக...

2023-10-03 20:06:33
news-image

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை...

2023-10-03 20:29:45
news-image

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை...

2023-10-03 16:09:19
news-image

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மஹரகம சீதாவின்...

2023-10-03 19:43:02
news-image

தடைப்பட்ட 98 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப்...

2023-10-03 16:44:05
news-image

நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும்...

2023-10-03 16:43:14
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு சட்டமா அதிபர் அழுத்தம்...

2023-10-03 16:07:36
news-image

இ.தொ.கா. உப தலைவர் திருகேஸ் செல்லசாமியின்...

2023-10-03 18:40:12
news-image

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பங்கெடுத்த...

2023-10-03 19:30:42
news-image

வரவு - செலவுத் திட்டத்துக்கு பின்...

2023-10-03 16:42:15