ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் வெலிஓயா பகுதியில் கூடிய விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை சட்டவிரோத மதுபான போத்தல்களை மீட்டுள்ளதுடன், இதனை வைத்திருந்த நபரும் பொலிஸாரால் இன்று காலை 10.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பினை மேற்கொண்ட பொலிஸார் 45 சாராய போத்தல்களும், 48 பியர் டின்களும் சாராயத்தினை ஊற்றிக் கொடுப்பதற்காக வைத்திருந்த 26 சிறிய போத்தல்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
புத்தாண்டு தினத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த போதே சாராய போத்தல்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் மதுபான போத்தல்கள் எதிர்வரும் தினங்களில் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM