கோயிலை அவமதித்த தீப்தி போகொல்லாகம: அமைச்சர் மனோ குற்றச்சாட்டு

Published By: Devika

30 Dec, 2017 | 02:14 PM
image

கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவி தீப்தி போகொல்லாகம, காலனித்துவ ஆளுனரின் மனைவியைப் போல் நடந்துகொள்வதாக அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருகோணமலை, மூதூரில் உள்ள கோயில் ஒன்றில் செருப்பு அணிந்தபடி கோயில் வளாகத்துக்குள் வந்த அவரை, செருப்பைக் கழற்றிவிட்டு வருமாறு பெண்கள் சிலர் கூறியிருந்தனர். 

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமல்லாமல், இந்துக் கடவுளரையும் அங்கு கூடியிருந்த இந்து பக்தர்களையும் தரக்குறைவாக விமர்சித்திருந்தார் தீப்தி. அதை எதிர்த்து பெண்கள் கூக்குரலிட்டனர். இந்தக் காட்சி காணொளியாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதை தனது ட்விட்டர் கணக்கில் சுட்டிக் காட்டிய அமைச்சர் மனோ கணேசன் தீப்தியின் நடவடிக்கைகள் இன நல்லிணக்கத்துக்குப் பெரும் அச்சுறுத்தல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தீப்தியுடன் வந்திருந்த பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் பாதணிகளைக் கழற்றிவிட்டே கோயிலுக்குள் நுழைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18