கோயிலை அவமதித்த தீப்தி போகொல்லாகம: அமைச்சர் மனோ குற்றச்சாட்டு

Published By: Devika

30 Dec, 2017 | 02:14 PM
image

கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவி தீப்தி போகொல்லாகம, காலனித்துவ ஆளுனரின் மனைவியைப் போல் நடந்துகொள்வதாக அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருகோணமலை, மூதூரில் உள்ள கோயில் ஒன்றில் செருப்பு அணிந்தபடி கோயில் வளாகத்துக்குள் வந்த அவரை, செருப்பைக் கழற்றிவிட்டு வருமாறு பெண்கள் சிலர் கூறியிருந்தனர். 

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமல்லாமல், இந்துக் கடவுளரையும் அங்கு கூடியிருந்த இந்து பக்தர்களையும் தரக்குறைவாக விமர்சித்திருந்தார் தீப்தி. அதை எதிர்த்து பெண்கள் கூக்குரலிட்டனர். இந்தக் காட்சி காணொளியாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதை தனது ட்விட்டர் கணக்கில் சுட்டிக் காட்டிய அமைச்சர் மனோ கணேசன் தீப்தியின் நடவடிக்கைகள் இன நல்லிணக்கத்துக்குப் பெரும் அச்சுறுத்தல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தீப்தியுடன் வந்திருந்த பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் பாதணிகளைக் கழற்றிவிட்டே கோயிலுக்குள் நுழைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47