பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள வீரகேசரி ஆசிரிய பீடத்தில் கடமையாற்றிய சிரோஷ்ட ஊடகவியலாளர் பன்னீர்செல்வத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி சற்றுமுன்னர் அஞ்சலி செலுத்தினார்.
52 வயதான அவர் அண்மைக்காலமாக கடுமையான சுகவீனமுற்று தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று காலை வேளையில் காலமானார்.
1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீரகேசரி நிறுவனத்தின் விளம்பரப்பகுதியில் இலிகிதராக இணைந்து கொண்ட அவர் ஆக்கங்களையும் எழுதி வந்தார். சிறந்த மொழிபெயர்ப்பாளராக விளங்கிய பன்னீர்செல்வம் மிகக்குறுகிய காலத்தில் தன்னை ஊடகத்துறையில் இணைத்துக்கொண்டார். இவர் தினக்குரல் பத்திரிகையிலும் தொழில் புரிந்ததுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கட்டுரைகளையும் எழுதினார்.
மீண்டும் வீரகேசரியில் இணைந்து கொண்ட பன்னீர்செல்வம் பாராளுமன்ற செய்தியாளராகவும் முழுநேர ஊடகவியலாளராகவும் பணியாற்றினார். அத்துடன் பல்வேறு கட்டுரைகளையும் எழுதினார்.
இதேவேளை இலங்கை பத்திரிகை பேரவை மற்றும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் ஆகியன இணைந்து வருடந்தோறும் மேற்கொண்டுவரும் சிறந்த ஊடகவியலாளருக்கான விருது விழாவில் இம்முறை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM