இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு புதிய பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க வழங்கிய பயிற்சிகளின் மூலம் புது நம்பிக்கை பிறந்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்களிலிருந்து அறியக் கிடைக்கின்றது.
இலங்கை அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற சந்திக்க ஹத்துருசிங்க நேற்றுமுன்தினம் வீரர்களுக்கான பயிற்சிகளை வழங்க ஆரம்பித்தார்.
அன்றைய தினம் நான்கு பிரிவுகளில் வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. அத்தோடு வீரர்கள் அனைவரும் உற்சாகத்தோடு இந்த பயிற்சிகளில் கலந்துகொண்டதை காணக்கிடைத்தது.
அத்தோடு வீரர்களுடன் சிறந்ததொரு தொடர்பாடலை வெகுசீக்கிரத்தில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஹத்துருசிங்க தெரிவித்தார்.
இவரின் நடவடிக்கைகள் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய நம்பிக்கையைத் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி பயிற்சிகளின் போது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் ஹத்துருசிங்க ஆலோசித்து வருகிறார்.
அதுமட்டுமன்றி வீரர்களின் குறைநிறைகளை தொழில்நுட்பத்தின் மூலம் அறிந்து அதற்கேற்ப பயிற்சிகளை வழங்கும் திட்டமும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவளை அவுஸ்திரேலிய உளவிய லாளர் வைத்தியர்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM