உலகின் முதல்தர சுழல் ஜாம்பவானான இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பந்துவீச்சு பாணி சட்ட விதிகளை மீறியது என்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து அவரை அவமானப்படுத்தப் பார்த்தனர் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோ தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 22 வருடங்கள் கழித்து இந்தத் தகவலை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.
முத்தையா முரளிதரன் தனது கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெறும்வரையிலும் எதிரணி வீரருக்கு அச்சுறுத்தலாகவே இருந்தார்.
இத்தனைக்கும் ஆசிய நாடுகளை விட மேற்கத்தைய நாடுகளான அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஏன் தென்னாபிரிக்க அணி கூட முத்தையா முரளிதரனின் பந்துவீச்சை எதிர்கொள்வதென்றால் அவர்களுக்கு ஒரு வித பயம் தொற்றிக்கொள்ளும்.
இந்நிலையில் முரளிதரன் பந்தை வீசி எறிவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நடுவர்களான டெரல் ஹெயார் மற்றும் ரொஸ் எமர்சன் ஆகியோர் குற்றம் சுமத்தினர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டு முத்தையா முரளிதரனை அவமானப்படுத்தும் நோக்கிலேயே அவர் மீது சுமத்தப்பட்டதாக தற்போது அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோ தெரிவித்துள்ளார்.
தற்போது மெல்போர்னில் நடைபெற்றுவரும் இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான பொக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை முன்னிட்டு
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோ, அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 1995ஆம் ஆண்டு நடைபெற்ற பொக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இலங்கை -– ஆஸி. அணிகள் மோதன. இந்தப் போட்டியின் போது முத்தையா முரளிதரனின் பந்து வீச்சில் தவறுகள் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது.
முத்தையா முரளிதரனின் பந்து வீச்சில் தவறுகள் இருப்பது அவதானிக்கப்பட்டிருப்பின், அது போட்டி ஆரம்பத்திற்கு முன்னர் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டிய பிரச்சினை எனவும், முரளிதரன் அத்தகைய சூழலுக்கு முகம் கொடுத்தமை யானது, வீரர்கள் முகம் கொடுக்கக் கூடாத துரதிர்ஷ்டவசமான நிலையெனவும் ஸ்டீவ் வோ குறிப்பிட் டுள்ளார்.
இதன் மூலம் முரளிக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளதாக 22 வருடங்கள் கழித்து தெரிவித்துள்ளார் ஸ்டீவ் வோ.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM