அதிகமாக வீடியோ கேம்ஸ் விளையாடுவது உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ந்து 12 மணி நேரம் வீடியோ கேம் விளையாடுவது நண்பர்களையும், உறவினர்களையும், குடும்பத்தினரையும் எரிச்சலடைய செய்வதுடன், மனநல பாதிப்புகளையும் ஏற்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ள உலக சுகாதார நிறுவனம் Gaming Disorder என்பதை தனது Beta Draft இல் சேர்த்துள்ளது.
தொடர்ந்து விளையாடுவதற்கான உந்துதலை ஒருவர் பெறும்போது, வீடியோ கேம்கள் வெறும் கேம்களாக மட்டுமே அல்லாமல் மனதின் மட்டங்களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது. தொடர்ந்து வீடியோ கேம்களை விளையாடுவது அன்றாட வாழ்க்கை செயல்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து வீடியோ கேம்களை விளையாடும் இப்பழக்கம் “தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், சமூகம், கல்வி, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஒரே கேமை தொடர்ந்து விளையாடுவதோ வீடியோகேம் தொடர்களும் இதே விளைவை ஏற்படுத்துகிறது” என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
பொதுவாக ஓராண்டிற்கும் மேலாக வீடியோ கேம் விளையாடுபவர்களுக்கே இத்தகைய பாதிப்புகள் ஏற்பதுவது கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து விளையாடுபவர்கள் பலர் ஓராண்டு காலத்திற்கு முன்பாகவே இத்தகைய பாதிப்பிற்குள்ளாவதும் தெரியவந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் சார்பில் 2018ஆம் ஆண்டு வெளியிடப்படவுள்ள சர்வதேச நோய்க்கான வரையறை பட்டியலில் Gaming Disorder இடம்பெறுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM