28, 29 இல் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் முக்கிய கூட்டங்கள்

Published By: Robert

25 Dec, 2017 | 11:25 AM
image

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்­பித்­துள்ள நிலையில் எதிர்­வரும் 28ஆம் திகதி மற்றும் 29ஆம் திக­தி­களில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இரு­வேறு முக்­கிய கூட்­டங்கள் நடை­பெ­ற­வுள்­ளன. 

28ஆம் திகதி பண்­டா­ர­நா­யக்கா ஞாபகா ர்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள், பிர­தி­நி­திகள் பங்­கேற்கும் விசேட கலந்­து­ரை­யா­ட­லொன்று நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை வெற்றி கொள்­வ­தற்­காக பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுடன் கூட்­டாக சுதந்­திரக் கட்சி முன்­னெ­டுக்­க­வுள்ள நட­வ­டிக்­கைகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ள­தோடு திட்­ட­மிடல்கள் சிலவும் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. 

இதே­வேளை மறு­தி­ன­மான 29ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான வேட்­பா­ளர்கள் அனை­வரும் பங்­கேற்கும் விசேட கருத்­த­ரங்­கொன்றும் நடை­பெ­ற­வுள்­ளது.

சுகத­தாஸ உள்­ளக அரங்கில் நடை­பெ­ற­வுள்ள இந்த கருத்­த­ரங்­கிற்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலைமை தாங்­க­வுள்ளார். இதன்­போது உள்ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை சிறப்­பாக முகங்­கொ­டுப்­பது தொடர்­பா­கவும், கட்­சியின் கொள்கை விடயங்களையும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரதான தொனிப்பொருள் மற்றும் பரப்புரைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட வுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08