வட மாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மலேஷிய குழுவொன்றை அனுப்பவுள்ளதாக மலேசியப் பிரதமர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.
மலேசியப் பிரதமருக்கும் வடக்கு மாகாண சபை முதலமைச்சருக்குமிடையில் இன்று காலை ஹோட்டலொன்றில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போதே மலேசியப் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சுமார் 45 நிமிடங்கள் வரை குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகளை மலேஷிய பிரதமருக்கு வடக்கு முதலமைச்சர் எடுத்துரைத்துள்ளார்.
சுமார் 62 ஆயிரம் ஏக்கர் காணிகளில் படையினர் நிலைகொண்டுள்ளதாகவும், சுமார் ஐயாயிரம் ஏக்கர் காணி மட்டுமே இது வரையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் வணிகம், மீன்பிடி, விவசாயம், சுற்றுலா போன்ற துறைகளில் படையினரின் கையே ஓங்கி இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போரினால் பாதிக்கப்பட்ட 49 ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களும், சுமார் 11 ஆயிரம் முன்னாள் போராளிகளின் குடும்பங்களும், விசேட தேவையுடையோர்களும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு சுழலும் நிதியத்தை ஏற்படுத்தினால் உதவியாக இருக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள மலேஷிய பிரதமர்,
அவ்வாறான சுழலும் நிதியம் தமது நாட்டில் ஏற்படுத்தப்பட்டதாகவும், வசதி குறைந்தவர்களுக்கு அது நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தது என்றும் பதிலளித்துள்ளார்.
இதேவேளை, வீடமைப்பு தேவைப்பாடு மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்தும் மலேஷிய பிரதமருக்கு முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
இந்த நிலையில், தகவல் சேகரிக்கும் குழுவை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், மலேஷியாவில் இருந்து வடமாகாணத்திற்கு அனுப்புவதாக மலேசியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
எந்தெந்தத் துறைகளில் உதவிகளை வழங்க முடியும், முதலீடுகள் செய்ய முடியும் என்பதை அந்தக் குழு ஆராய்ந்து தமக்கு அறிக்கை சமர்ப்பித்த பின்னர், உரிய நடவடிக்கை எடுப்பதாக மலேசியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM