வடக்கு மக்களின் தேவைகளை அறிய அரசின் ஒத்துழைப்புடன் மலேசிய குழு

Published By: Priyatharshan

19 Dec, 2017 | 08:23 PM
image

வட மாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மலேஷிய குழுவொன்றை அனுப்பவுள்ளதாக மலேசியப் பிரதமர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.

மலேசியப் பிரதமருக்கும் வடக்கு மாகாண சபை முதலமைச்சருக்குமிடையில் இன்று காலை ஹோட்டலொன்றில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போதே மலேசியப் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

சுமார் 45 நிமிடங்கள் வரை குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகளை மலேஷிய பிரதமருக்கு வடக்கு முதலமைச்சர் எடுத்துரைத்துள்ளார்.

சுமார் 62 ஆயிரம் ஏக்கர் காணிகளில் படையினர் நிலைகொண்டுள்ளதாகவும், சுமார் ஐயாயிரம் ஏக்கர் காணி மட்டுமே இது வரையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் வணிகம், மீன்பிடி, விவசாயம், சுற்றுலா போன்ற துறைகளில் படையினரின் கையே ஓங்கி இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போரினால் பாதிக்கப்பட்ட 49 ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களும், சுமார் 11 ஆயிரம் முன்னாள் போராளிகளின் குடும்பங்களும், விசேட தேவையுடையோர்களும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு சுழலும் நிதியத்தை ஏற்படுத்தினால் உதவியாக இருக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள மலேஷிய பிரதமர்,

அவ்வாறான சுழலும் நிதியம் தமது நாட்டில் ஏற்படுத்தப்பட்டதாகவும், வசதி குறைந்தவர்களுக்கு அது நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தது என்றும் பதிலளித்துள்ளார்.

இதேவேளை, வீடமைப்பு தேவைப்பாடு மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்தும் மலேஷிய பிரதமருக்கு முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

இந்த நிலையில், தகவல் சேகரிக்கும் குழுவை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், மலேஷியாவில் இருந்து வடமாகாணத்திற்கு அனுப்புவதாக மலேசியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எந்தெந்தத் துறைகளில் உதவிகளை வழங்க முடியும், முதலீடுகள் செய்ய முடியும் என்பதை அந்தக் குழு ஆராய்ந்து தமக்கு அறிக்கை சமர்ப்பித்த பின்னர், உரிய நடவடிக்கை எடுப்பதாக மலேசியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58