16 வயது சிறுமி உள்ளிட்ட பல பெண்களை பிரிட்டனை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த 34 வயதான ப்ரூனோ லேங்லி என்பவர் ஐ டிவி என்னும் தனியார் தொலைக்காட்சியில் நடித்து புகழ்பெற்றவர்.
இவர் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார்.
ப்ரூனோவிற்கு 29 வயதாக இருக்கும் போது 16 வயது சிறுமி ஒருவருடன் நட்பாக பழகி அவருக்கு ஒரு சிற்றின்ப காதல் குறித்த புத்தகம் ஒன்றை கொடுத்து படிக்க சொல்லியிருக்கிறார். இந் நிலையில் அந்த சிறுமியுடன் ப்ரூனோ உடலுறவு கொண்டுள்ளார். தொடர்ந்து சிறுமியுடன் உல்லாசமாக இருந்த போது தான் அவர் மோசமானவர் என்பது சிறுமிக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிறுமி ப்ரூனோவுடனான தொடர்பை முறித்துக்கொண்டுள்ளார். ஆனால் ப்ரூனோ ஒரு வருடம் கழித்து அந்த சிறுமியை மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார்.
இந்நிலையில் ப்ரூனோ வேறு பல பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் அந்த தொலைக்காட்சி நிர்வாகம் அவரை நீக்கி ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
இதனையடுத்து ப்ரூனோ மீது பெண்கள் புகார் அளிக்க அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஒரு பெண்ணின் கணவர் முன்னிலையிலேயே ப்ரூனோ அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்திய குற்றத்திற்கு ப்ரூனோவிற்குக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு 12 மாதம் சமூக கட்டுப்பாடு தண்டனையும், பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் கையெழுத்திடவும் உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
ஆனால் அவரது மன்னிப்பு யாருக்கும் உதவாது என பாதிக்கப்பட்ட சிறுமி கருத்துக்கூறியுள்ளார். இதனிடையே தனது தவறுக்கு வந்துவதாகவும், தனது செயலுக்கு வேதனைப்படுவதுடன் வெட்கி தலைகுனிவதாக ப்ரூனோ கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM