புத்தளத்தில் தனித்து மு.கா. வெல்லும்

Published By: Priyatharshan

16 Dec, 2017 | 09:06 AM
image

புத்­தளம் மாவட்­டத்தில் தங்­க­ளுடன் இணைந்து தேர்­தலில் போட்­டி­யி­டு­மாறு  ஐக்­கிய தேசியக் கட்சி வலி­யு­றுத்­தி­யது. அதே­நேரம் முஸ்லிம் காங்­கிரஸ் எங்­கெல்லாம் கால்­ப­திக்­கி­றதோ அங்­கெல்லாம் தங்­க­ளு­டைய பட்­டி­யலை போட்­டுக்­கொண்டு, ஐக்­கிய தேசியக் கட்­சி­யாவ­தற்கு ஒரு­சிலர் முண்­டி­ய­டிக்­கின்­றனர்.

ஐக்­கிய தேசியக் கட்­சியில் யார் சேர்ந்­தாலும், சேரா­விட்­டாலும் முஸ்லிம் காங்­கிரஸ் தனித்­து­நின்று வெல்­லக்­கூ­டிய கட்சி என்­பதை புத்­தளம் மாவட்­டத்தில் நிரூ­பிக்­க­வுள்­ளது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முத­லா­வது தேர்தல் பிர­சாரக் கூட்டம் நேற்று வெள்­ளிக்­கி­ழமை புத்­தளம் மாவட்­டத்தில் எருக்­க­லம்­பிட்டி, நாக­வில்லு பிர­தே­சத்தில் நடை­பெற்­ற­போது, அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே ரவூப் ஹக்கீம் இவ்­வாறு தெரி­வித்தார். அங்கு உரை­யாற்­று­கையில் அவர் மேலும் கூறி­ய­தா­வது;

புத்­தளம் மாவட்­டத்தில் முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆத­ர­வுத்­தளம் குறைந்­து­விட்­டது என்­ற­தொரு மாயையை சிலர் ஏற்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றனர். அதை பொய்­யென நிரூ­பிப்­ப­தற்­காக எங்­க­ளது கோட்­டை­யாக திகழும் அம்­பாறை மாவட்­டத்தை விட்­டு­விட்டு, கட்­சியின் முத­லா­வது தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தை புத்­தளம் மாவட்­டத்தில் ஆரம்­பித்­துள்ளோம். அதுவும் புத்­த­ளத்தில் வண்­ணாத்­தி­வில்லு பிர­தே­ச­ச­பைக்கு மாத்­தி­ரமே வேட்­பு­மனு தாக்­கல்­செய்­துள்ள நிலையில் இந்தக் கூட்­டத்தை நடாத்­திக்­கொண்­டி­ருக்­கிறோம்.

மர்ஹூம் நூர்தீன் மசூர் காலத்தில் வன்னி மாவட்­டத்­தையும் தாண்டி பல மாவட்­டங்­களின் கட்­சியின் ஆத­ர­வுத்­தளம் எந்­த­ளவு உச்­சக்­கட்­டத்தில் இருந்­ததோ, அதே­ய­ள­வுக்கு முஸ்லிம் காங்­கி­ரஸை மீண்டும் இட்­டுச்­செல்­வ­தற்கு நீங்கள் வழங்­கு­கின்ற அனைத்து ஒத்­து­ழைப்­புக்கும் நன்றி. புத்­த­ளம் மாவட்­டத்தில் அபி­வி­ருத்தி யுகத்தை ஆரம்­பிப்­ப­தற்கு, புத்­தளம் பிர­தே­ச­ச­பையின் ஆட்­சியை முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆத­ர­வின்றி யாரும் அமைக்க முடி­யாது. அதற்­கான பய­ணத்தை நாங்கள் இப்­போது ஆரம்­பித்­துள்ளோம்.

நேற்று முன்­தி­னம்­வரை முஸ்லிம் காங்­கி­ரஸில் இருப்­ப­தாக நடித்­துக்­கொண்­டி­ருந்த அக்­க­ரைப்­பற்று மாந­க­ர­ச­பையின் ஒரே­யொரு உறுப்­பினர், மன்­னா­ரி­லி­ருந்து அம்­பா­றையில் கால்­ப­திக்­கலாம் என்ற நப்­பா­சையில் வந்­தி­ருக்கும் தலை­வ­ருடன் சேர்ந்­து­கொண்டார். அவரை கட்­டித்­த­ழு­விய பின்­னரே, தனது நிய­மனப் பத்­தி­ரத்தில் கைச்­சாத்­தி­டுவேன் என்று காத்­துக்­கொண்­டி­ருந்தார். பின்னர் தான் வைத்­தி­ருந்த இரண்டு நிய­மனப் பத்­தி­ரங்­களில் ஒன்றில் கைச்­சாத்­திட்­டு­விட்டு, அவ­ச­ர­மாக அதை கைய­ளித்தார். கடை­சியில் அவர் கொடுத்­தது கையொப்­ப­மி­டாத நிய­ம­னப்­பத்­திரம். புதிய தலை­வரை கட்­டிப்­பி­டிக்­கப்போய் கடை­சியில் அவ­ரது வேட்­பு­மனு நிரா­க­ரிக்­கப்­பட்­டு­விட்­டது.

அங்­குள்ள முன்னாள் அமைச்சர் ஜனா­தி­ப­தி­யுடன் சேர்ந்­து­கொண்டு அக்­க­ரைப்­பற்று மாந­க­ர­ச­பையை கைப்­பற்­று­வ­தற்கு காத்­துக்­கொண்­டி­ருக்­கிறார். அவ­ருக்கு வேட்­பா­ளர்கள் இல்­லாமல் தனது இரண்டு புதல்­வர்­க­ளையும் தேர்­தலில் கள­மி­றக்­கி­யுள்ளார். வாரி­சு­ரிமை அர­சி­யலில் அந்தக் கட்சி செல்வதனால் மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த நிலையில் முஸ் லிம் காங்கிரஸ் அக்கரைப்பற்றில் பல மான அணியை நிறுத்தியிருக்கிறது. இதன் மூலம் அக்கரைப்பற்று பிரதேச சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதில் எந்தவிதமான சந்தேகங்களும் கிடையாது. அத்துடன் மாநகரசபையின் ஆட்சியையும் கைப்பற்றுவதற்கான பெரிய முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11