இரு பெண்கள் இளைஞரொருவருக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி மர்மமான பானமொன்றை அருந்தக் கொடுத்த பின்னர் அவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய விபரீத சம்பவம் தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
சம்பவ தினம் லிம்பொபோ மாகாணத்தில் பொலொக்வேன் எனும் இடத்திலுள்ள வீதியில் பயணம் மேற்கொள்வதற்காக ஏதாவது வாகனம் வருகிறதா என அந்த இளைஞர் காத்து கொண்டிருந்த போது, அவ்வழியாக காரில் வந்த இரு நடுத்தர வயதுப் பெண்கள் அவருக்கு தமது காரில் பயணத்தைத் தொடர உதவுவதாக தெரிவித்து அவரை தமது காரில் ஏற்றிக் கொண்டனர்.
அதன் பின் அந்தப் பெண்கள் அவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி மர்மான பானமொன்றை அருந்த நிர்ப்பந்தித்துள்ளனர்.
தொடர்ந்து அவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய அந்தப் பெண்கள் அவரை தஸானீன் நகருக்கு அண்மையிலுள்ள பிராந்தியமொன்றில் கைவிட்டுச் சென்றுள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த இளைஞரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பிராந்திய பொலிஸ் அதிகாரியான மோட்ஷி நகோப் தெரிவித்தார்.
தென் ஆபிரிக்காவில் இவ்வாறு பெண்களால் ஆணொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுவது இது முதல் தடவையல்ல. கடந்த மே மாதம் 23 வயது இளைஞர் ஒருவர் 3 பெண்களைக் கொண்ட குழுவால் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டிருந்தார். இதன்போது குறிப்பிட்ட அந்த இளைஞருக்கு மர்மமான சக்தியூட்டும் பானம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கடந்த ஜூலை மாதம் சிம்பாப்வேயின் சிதுங்விஸா பிராந்தியத்தில் பாடசாலை ஆசிரியரான ஆணொருவர் 3 பெண்களால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருந்தார்.
ஆபிரிக்க பிராந்தியங்கள் சிலவற்றில் கவர்ச்சியான புத்திசாலித்தனமான ஆண்களின் விந்தணுக்கள் மூலம் கர்ப்பம் தரித்து சிறப்பான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற தீவிர நம்பிக்கை நிலவுவதால் அத்தகைய ஆண்களை பெண்கள் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதும் அவர்களது விந்தணுக்களைத் திருடுவதும் அவ்வப்போது இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM