விக்கியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு முயற்சி? : வடக்கு மக்கள் அதிருப்தி

Published By: Digital Desk 7

14 Dec, 2017 | 12:18 PM
image

வட மாகாண முதலமைச்சர்  விக்னேஸ்வரனை பாராளுமன்றத்திற்கு அனுப்பி விட்டு அவருக்கு பதிலாக வேறொருவரை முதலமைச்சராக்கும்  திட்டம்  கட்சிக்குள் நிலவுகிறதா என்ற கேள்வி பொதுமக்களால்  எழுப்பப்பட்டுள்ளது.

வட மாகாண சபை முதலமைச்சர்  விக்னேஸ்வரனுக்கும்,  கட்சித் தலைமைப்பீடத்திற்கும் இடையே அண்மைக்காலமாக  முரண்பட்ட  கருத்து  இருந்து வரும் நிலையில்  அடுத்த மாகாண சபைத் தேர்தலில்  விக்னேஸ்வரனுக்கு பதிலாக வேறொருவரே முதலமைச்சர் வேட்பாளராக  நிறுத்தப்படுவார் என கட்சித் தலைமைப்பீடம் அண்மைக்காலமாக கூறி வருகின்றது.

இந் நிலையில்  நேற்று முன்தினம்  வட மாகாண சபையின்  வரவு செலவுத் திட்ட  விவாதத்தில் உரையாற்றிய  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான  எஸ். சுகிர்தன்  தனது உரையில், 

"இன்று  முதலமைச்சர் அரசியலில்  எங்கோ வளர்ந்து சென்றுவிட்டார்.  எமது மக்களுக்காக  அவர்  இனிவரும் காலத்தில் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். அடுத்த மாகாண சபைக்கு நல்லதொருவர்  முதலமைச்சராக வர வேண்டும்." என்று  கூறியிருந்தார்.

சுகிர்தனின்  இந்த உரை மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதுடன் இந்த மாகாண சபையின் ஆயுட் காலம் முடிவடைவதற்கு முன்னர்  முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பதிலாக வேறொருவரை  முதலமைச்சராக்கிவிட்டு  முதலமைச்சர் விக்னேஸ்வரனை தேசிய பட்டியல் ஊடாக  பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்லும்  எண்ணம் கட்சித் தலைமைப் பீடத்திற்கு ஏற்பட்டுவிட்டதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன்  அவரது சேவையை  வட பகுதி முழுவதற்கும் செய்வதையே தாங்கள் விரும்புவதாகவும்  தற்போதைய நிலையில்  கிழக்கிற்கு ஏற்பட்ட நிலைமை வடக்கிற்கு ஏற்படாது  ஒரளவாவது பெரும் தடுப்பு அரணாக விக்னேஸ்வரனே இருப்பதாகவும்  அவரே  தொடர்ந்தும்  வட மாகாண சபைக்கு  முதலமைச்சராக இருக்க வேண்டும் எனவும்  கூறியுள்ள  பொதுமக்கள்  பாராளுமன்றம் சென்ற  தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று தேசியத்தை இழந்து  ஐக்கிய தேசியத்துடன்  ஒன்றிணைந்த நிலையில் முதலமைச்சருக்கும் அந்த நிலைமை ஏற்பட்டு விட கூடாது அவர் தமிழ் தேசியத்திற்காக தொடர்ந்தும்  குரல் கொடுக்க வேணடும் என்றே தாங்கள் விரும்புவதாகவும் அவர்கள்  கூறியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22