அதிக விலைக்கு தேங்காய் விற்ற 28 பேருக்கு சட்ட நட­வ­டிக்கை

Published By: Priyatharshan

13 Dec, 2017 | 10:41 AM
image

மத்­திய மாகா­ணத்தில் நிர்­ணய விலையை விட கூடுதல் விலைக்கு தேங்காய் விற்­ப­னை யில் ஈடு­பட்ட 28 வியா­பா­ரி­க­ளுக்கு எதி­ராக நுகர்வோர் விவ­கார அதி­கார சபை­யி­னரால் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

கண்டி, மாத்­தளை மற்றும் நுவ­ரெ­லியா மாவட்­டங்­களில் கடந்த மூன்று நாட்­க­ளாக 9, 10 மற்றும் 11 ஆம் திக­தி­களில் மேற்­கொண்ட திடீர் சோத­னை­யின்­போதே நிர்­ணய விலையை விடக் கூடுதல் விலையில் தேங்காய் விற்­பனை செய்த வியா­பா­ரிகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக நுகர்வோர் விவ­கார சபையின் மத்­திய மாகாண உதவிப் பணிப்­பாளர் எம்.எஸ். நசீர் தெரி­வித்தார்.

தேங்காய் ஒன்றின் அதி­க­பட்ச சில்­லறை விலை 75 ரூபா என அண்­மையில் வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், நாடு முழு­வதும் நுகர்வோர் விவ­கார அதி­கார சபை­யினால் திடீர் சோதனை நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இதன் பிர­காரம் மைசூர் பருப்பு (கிலோ ரூபா 130/-), கட்டா கரு­வாடு (கிலோ ரூபா 1000/-), சாலையா கரு­வாடு (கிலோ ரூபா 420/-), தேங்காய் (ரூபா 75/-) போன்ற நுகர்வுப் பொருட்­க­ளுக்கு அர­சாங்­கத்­தினால் விலை நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் அதிக விலைக்கு நுகர்வுப் பொருட்­களை விற்­பனை செய்த குற்­றச்­சாட்டின் பேரில், கண்டி மாவட்­டத்தில் 45 பேரும், மாத்­தளை மற்றும் நுவ­ரெ­லியா மாவட்­டங்­களில் தலா 23 பேரும் நுகர்வோர் விவ­கார அதி­கா­ரி­களால் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர்.

இந்த 91 வியா­பா­ரி­க­ளுக்கும் எதி­ராக வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். நசீர்  மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33