மத்திய மாகாணத்தில் நிர்ணய விலையை விட கூடுதல் விலைக்கு தேங்காய் விற்பனை யில் ஈடுபட்ட 28 வியாபாரிகளுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக 9, 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் மேற்கொண்ட திடீர் சோதனையின்போதே நிர்ணய விலையை விடக் கூடுதல் விலையில் தேங்காய் விற்பனை செய்த வியாபாரிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார சபையின் மத்திய மாகாண உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். நசீர் தெரிவித்தார்.
தேங்காய் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 75 ரூபா என அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நாடு முழுவதும் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் பிரகாரம் மைசூர் பருப்பு (கிலோ ரூபா 130/-), கட்டா கருவாடு (கிலோ ரூபா 1000/-), சாலையா கருவாடு (கிலோ ரூபா 420/-), தேங்காய் (ரூபா 75/-) போன்ற நுகர்வுப் பொருட்களுக்கு அரசாங்கத்தினால் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிக விலைக்கு நுகர்வுப் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில், கண்டி மாவட்டத்தில் 45 பேரும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தலா 23 பேரும் நுகர்வோர் விவகார அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த 91 வியாபாரிகளுக்கும் எதிராக வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். நசீர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM