ரயில்வே சேவையாளர்களின் வேலை நிறுத்தத்தால் ரயில் சேவைகள் முடங்கிப் போயுள்ள நிலையில், ரயில்களில் பயணிக்கும் மாணவர்கள் மாற்று போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும்படி கல்வி அமைச்சர் கோரியுள்ளார்.
இதேவேளை, பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை நேரத்துடன் அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரயில்வே தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பதாக ரயில் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று முற்பகல் இடம்பெற்ற ரயில்வே தொழிற்சங்கங்களின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவிற்கும், ரயில்வே தொழிற்சங்கங்களுக்கும் இடையில் நேற்று இரண்டாவது தடவையாக இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளது.
இதன்போது ரயில்வே தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு முறையான தீர்வுகள் கிடைக்கவில்லையென தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இன்று 5 ஆவது நாளாகவும் ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM