தங்காலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடாவெல்ல மக்கள் வங்கி கிளை யில் துப்பாக்கி முனையில் இடம்பெற்ற பாரிய கொள்ளை தொடர்பிலான விசாரணைகளுக்காக ஆறு விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட் டுள்ளன.
தங்காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தி யட்சகர் கே.ஜி.எல்.ஸ்ரீதாலின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த ஆறு பொலிஸ் குழுக்களும் பல்வேறு கோணங்களில் சந்தேகநபர்களைத் தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தென் பிராந்தியத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
நேற்று முன்தினம் காலை 9.50 மணியளவில் வழமையான வங்கி நடவடிக்கைகளின்போது, குடாவெல்ல மக்கள் வங்கி கிளையினுள், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முகத்தை முழுமையாக மறைக்கும் வண்ணம் புல் பேஸ் ஹெல்மட் அணிந்து உள் நுழைந்துள்ளனர். அவர்கள் 9 மில்லி மீற்றர் ரக கைத்துப்பாக்கியைக் காட்டி முழு வங்கியையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், வங்கியில் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கை தொடர்பில் தயார் நிலையில் இருந்த பணத்தை முழுமையாக கொள்ளையிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளையின் பின்னர் செல்ல முற்படும் போது, அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவரையும் கொள்ளையர்கள் சுட்டுள்ளனர். அவரது காலில் சூட்டுக் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த நபர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொள்ளை தொடர்பில் நேற்று மாலை வரை பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணைகளில், வங்கிக்கொள்ளையில் ஈடுபட்டவர்கள் இருவரும், கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி, அளுத்கம நகரில் அமைந்துள்ள வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையம் ஒன்றில் கொள்ளையிட முயற்சித்த சம்பவத்துடனும் தொடர்புபட்டவர்களாக இருக்க வேண்டும் என சந்தேகம் எழுந்துள்ளது.
குறித்த நாணய மாற்று நிலையத்தில் பதிவான சி.சி.சி.ரி.வி. காணொளிகள், அதன்போது முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் போது வெளிப்பட்ட சன்னங்கள் ஆகியவற்றை இந்த வங்கிக்கொள்ளையுடன் ஒப்பீடு செய்யும் போது பொலிஸாருக்கு இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
மாத்தறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.கே.ஜயலத்தின் உத்தரவுக்கு அமைய, தங்காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ஜி.எல்.ஸ்ரீஜிதாலின் நேரடிக் கட்டுப்பாட்டில் தங்காலை பிராந் திய குற்றத்தடுப்புப் பிரிவும் தங்காலை பொலிஸாரும் இணைந்து விசாரணை களை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM