தான்சானியா மாணவி தாக்குதல் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தா ராமையா தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பெங்களூரில் தான்சானியா நாட்டு கல்லூரி மாணவியின் ஆடைகளை களைந்து பொதுமக்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. இது தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பி இருக்கிறோம். நிச்சயம் இந்த விவகாரத்தில் உரிய நீதி கிடைக்க வழி செய்வோம்.
இதனிடையே, தான்சானியா மாணவி மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான்சானியா தூதர் ஜோன் இந்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்து ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து இறந்து போன பெண்ணின் உறவினர்கள், விபத்து ஏற்படுத்தியதாக நினைத்து கார் ஒன்றை வழி மறித்து தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள் அந்த காரில் இருந்த தான்சானிய நாட்டைச் சேர்ந்த 21 வயது மாணவி ஒருவரை கீழே இழுத்து அடித்து உதைத்தனர். மேலும், அவரது ஆடைகளையும் களைந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவ் வழியாக வந்த பேருந்தில் ஏறி தப்பிக்க முயன்ற மாணவியை துரத்திச் சென்ற அந்த கொடூர கும்பல், அம் மாணவியை பஸ்ஸிலிருந்து வௌியே இழுத்து தாக்கியுள்ளது பாதிக்கப்பட்ட மாணவி பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் இளநிலை வர்த்தக மேலாண்மை (பி.பி.எம்) பிரிவில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM