பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள விவசாய பல்கலைக்கழக விடுதியை இலக்குவைத்து 4 தீவிரவாதிகள் நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் குறைந்தது 9 பேர் பலியானதுடன் 36 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானிலுள்ள தெஹ்ரீக் தலிபான் தீவிரவாத குழு உரிமைகோரியுள்ளது.
குண்டுத் தாக்குதலையடுத்து காயமடைந்தவர்கள் கைபர் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் 8 மாணவர்களும் ஒரு படைவீரரும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும் ஒரு காவலரும் ஒரு ஊடகவியலாளரும் உள்ளடங்குவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலையடுத்து மருத்துவமனையில் அவசரகால நிலைமையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
அதேசமயம் இந்தத் தாக்குதலில் காயமடைந்த இரு படைவீரர்கள் சிகிச்சைக்காக இராணுவ மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த படையினர் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் தரப்பில் மூவர் உயிரிழந்துள்ளதாக சில செய்திகளும் நால்வர் உயிரிழந்துள்ளதாக வேறு சில செய்திகளும் தெரிவிக்கின்றன.
நபிகள் நாயகத்தின் பிறந்ததின விடுமுறையையொட்டி அந்தப் பல்கலைக்கழகத்தின் விடுதி நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தாக்குதல்தாரிகள் அலங்கார முச்சக்கர வண்டியொன்றில் வந்து துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM