யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரை சேர்ந்தவர்களின் விளக்கமறியலை நீடித்து யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் 22 ஆம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன்பொஸ்கோ டிஸ்மன் என்பவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இக் கொலைச் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினர் யாழ்ப்பாணம் பண்ணை விஷேட அதிரடிப்படை முகாமினை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்.நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்றைய தினமும் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணி பி.மோகனதாஸ் முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக அறிக்கையொன்றை தாக்கல் செய்து குறித்த சம்பவம் தொடர்பாக தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்றுக்கு தெரிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து குறித்த இரு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரதும் விளக்கமறியலை எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடித்து யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM