தலைமையாசியையை தரக்குறைவாக விமர்சித்தது குறித்து விசாரிப்பதற்காக, ஆறாம் ஏழாம் வகுப்புகளைச் சேர்ந்த 88 மாணவியரின் ஆடைகளைக் களையச் செய்த மூன்று ஆசிரியைகள் மீது பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம், இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் இத்தாநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கஸ்தூரிபா காந்தி பெண்கள் பாடசாலையில், வகுப்பறை ஒன்றில் இருந்து காகிதத் துண்டு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. அதில், தலைமையாசிரியையும் மற்றொரு மாணவியையும் பற்றி தரக்குறைவான வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன.
இதை எழுதியது யார் என்று ஆறாம் ஏழாம் வகுப்புகளைச் சேர்ந்த 88 மாணவியரை மூன்று ஆசிரியைகள் விசாரித்துள்ளனர். எனினும் தமக்குத் தெரியாது என்று அவர்கள் கூறவே, உண்மையை வரவழைப்பதற்காக 88 மாணவிகளையும் ஆடையைக் களையும்படி ஆசிரியைகள் தண்டனை வழங்கினர்.
கடந்த 23ஆம் திகதி இடம்பெற்றபோதும் இச்சம்பவம் உடனடியாக வெளிவரவில்லை. எனினும் கடந்த திங்களன்று (27) பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர் சிலர் இச்சம்பவம் குறித்துப் புகாரளித்தனர்.
எது எப்படியிருந்தபோதும் மாணவியரின் ஆடைகளைக் களையச் செய்தது சட்டப்படி குற்றமாகும் எனத் தெரிவித்துள்ள பொலிஸார், குறித்த ஆசிரியைகள் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM