பிணைமுறி தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே தான் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி விளக்கமளித்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
“நான் பிரதமராகப் பதவி வகித்த காலகட்டத்தில் மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் குறித்த விசாரணைக்கு ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகி விளக்கமளித்திருக்கிறேன். இதற்கு நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளேன்.
எனினும் 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலத்தில் மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறிகள் கொடுக்கல் வாங்கல்கள் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளன.
“மேலும் பாராளுமன்றுக்குத் தெரியாமல் அல்லது அறிவிக்காமல் பெருந்தொகைக் கடன்கள் பெறப்பட்டுள்ளன. நிதி தொடர்பான கொடுக்கல் வாங்கல் அனைத்து நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை பாராளுமன்றம் கொண்டுள்ளது.
அவ்வாறிருக்கையில் பாராளுமன்றத்திற்குத் தெரியாமல் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பெருந்தொகையான கடன்கள் பெறப்பட்டுள்ளன. அதனாலேயே நாட்டின் கடன்சுமை அதிகரித்த்துள்ளது. எனவே, பாராளுமன்றத்திற்கு தெரியாது பெறப்பட்ட வெளிநாட்டு கடன்கள் தொடர்பிலும் ஆராயந்து நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM